கல்முனை; உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களுக்கான எல்லை நிர்ணயம் சம்பந்தமான கலந்துரையாடல் - ரவூப் ஹக்கிம் தலைமையில் - Sri Lanka Muslim

கல்முனை; உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களுக்கான எல்லை நிர்ணயம் சம்பந்தமான கலந்துரையாடல் – ரவூப் ஹக்கிம் தலைமையில்

Contributors

-ஹாசிப் யாஸீன்-

கல்முனை பிரதேச அபிவிருத்தி மற்றும் உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களுக்கான எல்லை நிர்ணயம் சம்பந்தமான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கிம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எம்.நௌபல் மற்றும் எல்லை நிர்ணய சபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதன்போது கல்முனை மாநகர உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களுக்கான திட்ட வரைவினை கையளித்து அது பற்றி எல்லை நிர்ணய சபை அதிகாரிகள் மற்றும் சபையோருக்கு விரிவான விளக்கத்தை அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். தற்போது இச்செயற்பாடு இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team