
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 2 நாள் விஷேட பயிற்சி நெறி..!
நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 2 நாள் விஷேட பயிற்சி நெறி கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் 2022.01.10 மற்றும் 11ம் திகதிகளில் நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் கப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லதீப், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனிபா, வளவாளர்களாக சிரேஷ்ட உள வளத்துணை ஆலோசகர்களான எஸ். ஸ்ரீதரன், கே. புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சி நெறியானது “பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்” என்னும் மகுடத்தின் கீழ் இடம்பெற்றது. இப் பயிற்சி நெறியின் போது இன நல்லுறவு தொடர்பான பல்வேறான குழு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவை இடம்பெற்றதுடன் இந்த பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More Stories
இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள்,...
அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!
அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார...
முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற...
கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாறக் மௌலவி வாழ்த்து!
கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி ரணில் விக்ரமசஇங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களையும்...
மீண்டும் கொரோனா அலை?
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும்,...