அரசுக்கு திட்டம் இல்லையென்றால் பாராளுமன்றத்தை மூடுங்கள்..! - Sri Lanka Muslim

அரசுக்கு திட்டம் இல்லையென்றால் பாராளுமன்றத்தை மூடுங்கள்..!

Contributors
author image

Editorial Team

நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றால் பாராளுமன்றத்தை மூட வேண்டும் என ஆளும் கட்சியின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார்.

இதுவரையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசியே நெருக்கடியை தீர்க்க முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த அரசாங்கம் சர்வகட்சி கட்சி அரசாங்கம் அல்ல என்பதனால் தேசிய சபையை உருவாக்கி, அதன் மூலம் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team