
அறுபது லட்ச ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு தலைமறைவு!
அறுபது லட்ச ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தியாவிற்கு யாத்திரை அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய நபர்களிடம் பாரியளவில் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றி குறித்த பௌத்த பிக்கு 60 லட்ச ரூபா பணம் சேகரித்துள்ளார்.
அனுராதபுரம் சவாஸ்திபுர அதரஎல பிரதேச விஹாரை ஒன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பௌத்த பிக்குகள் மற்றும் மக்களிடம் தலா 30000 ரூபா முதல் பணம் திரட்டியுள்ளார்.
திரட்டிய பணத்தை வாகனங்களுக்காக குத்தகைக் கொடுப்பனவிற்காக குறித்த பௌத்த பிக்கு செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பௌத்த பிக்கு தேடப்பட்டு வருவதாகவும், அனுராதபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.lw
More Stories
எதிர்வரும் சில தினங்களில் தென்மேல் பருவமழை ஆரம்பம்!
நாட்டின் எதிர்வரும் சில நாட்களில் தென்மேல் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (03) மேல், சப்ரகமுவ, மத்திய,...
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...