
இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிப்பு..!
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரானா டேவிட் சேகர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் சேகர், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி முதல் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.
இந்த நிலையிலே, இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி மூன்று இருபதுக்கு 20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
More Stories
IPL தொடரிலிருந்து தடை செய்யப்படும் இலங்கை வீரர்கள்?
ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி 4 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை...
IPL வாய்ப்பு: இந்தியா செல்கிறார் வியாஸ்காந்!
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவனான...
வரலாற்றில் முதல்முறையாக தேசிய கபடி அணித் தலைவராக முஸ்லிம் ஒருவர் நியமனம்!
இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக - வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணம் - நிந்தவூரைச் சேர்ந்த 25 வயது எம்.ரி.அஸ்லம்...
ஆப்கான் ஒரு நாள் தொடரை புறக்கணித்த அவுஸ்திரேலியா!
மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவிருந்த ஒரு நாள் தொடரில் இருந்து விலக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்...
2023 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில்!
2023ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கட் பேரவை, இந்த தொடரில்...
அரபுப் பிராந்தியத்தில் புதிய அத்தியாயத்தை, தொடங்கப் போகும் ரொனால்டோ!
போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம்...