இலங்கை முஸ்லிம்கள் பற்றி, சர்வதேச முஸ்லிம்கள் அச்சத்தை வெளியிடுகின்றனர் - சவூதி தூதுவர் கிருஸ்ணமூர்த்தி - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்கள் பற்றி, சர்வதேச முஸ்லிம்கள் அச்சத்தை வெளியிடுகின்றனர் – சவூதி தூதுவர் கிருஸ்ணமூர்த்தி

Contributors

இலங்கையில் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதாக இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான தூதுவர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சவூதியில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வில் பங்கேற்ற அவர், இந்த தகவல்களை வெளியிட்டார்.

 

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர். எனினும் இலங்கையில் தீவிரவாத்துக்கு இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

 

இலங்கையில் நாட்டு பற்றுள்ள முஸ்லிம்களே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாக குறிப்பிட்டார்.

 

இதேவேளை நிகழ்வில் பங்கேற்ற இலங்கையில் இருந்து சவூதிக்கு சென்று பணிபுரியும் இலங்கையர் ஒருவர், அளுத்கமையில் வன்முறைகள் நிறைவுப்பெற்று தமது குடும்பமும் மீள வீடு திரும்பிவிட்டது எனினும் அங்கு பதற்றம் தணியவில்லை என்று குறிப்பிட்டதாக அரப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team