
சவூதியிலிருந்து 1500 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!
பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில் சவூதி அறேபியாவில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் சவூதி அறேபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு கடந்த 3ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் காலப்பகுதிக்குள் சவூதியை விட்டு வெளியேறாது தொடர்ந்தும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களைக் கைது செய்து சிறைத் தண்டனை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பொது மன்னிப்புக் காலப்பகுதிக்குள் 1500 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் சவூதி அறேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் கீழ் தங்கியிருப்பதாகவும் அவர்களை மீண்டும் இலங்கை அழைத்துவர , தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
More Stories
வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு – ரணிலிடம் எடுத்துரைத்த ரிஷாட்!
ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது....
மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. அரபுக் கல்லூரியின் தலைவர்...
ஜனாஸா எரிப்பு; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?
கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழையான தீர்மானம் மேற்கொண்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், பிழையான தீர்மானம் மேற்கொண்ட...
வவுனியா, புதிய சாளம்பைக்குளம் – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி!
வவுனியா, புதிய சாளம்பைக்குளம், அல்-அமான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இடம்பெற்ற கலை, கலச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை...
ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை (29) தாராபுரம், அல்-மினா மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அரபுக்கல்லூரியின் அதிபர்களான இல்ஹாம்,...
கொழும்பு ஜாவத்த ஜும்ஆ பள்ளிவாசலின் பாராட்டத்தக்க செயற்பாடுகள்!
கொழும்பு ஜாவத்தயில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்றிரவு தராவீஹ் தொழுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. அப்பள்ளிவாசலின் நேர்த்தியும், அழகும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. தொழுகையில் ஈடுபட்ட பொழுது ஜமாஅத் தொழுகை...