
சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு குற்றவாளி பெண்ணை மணமுடிக்க முடிவு
சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரும் கோடீஸ்வரர் ஃபஹத் சாத் அல் ஜோஹானி!
ஏற்கெனவே மூன்று மனைவிகளோடும்குழந்தைகளோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். நான்காவதாக திருமணம் முடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
அந்த அளவு செல்வமும் உடல் ஆரோக்கியமும் அவருக்கு இருக்கிறது. அவ்வாறு நான்காவது முறையாக திருமணம் முடிக்கும் போது சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு குற்றவாளி பெண்ணை மணமுடிக்க முடிவு செய்துள்ளார். சமூகத்தில் பலரும் இதுபோன்ற செயலை செய்ய முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘பாவம் செய்த மனிதர்களை படைத்த இறைவனே மன்னிப்பதாக குர்ஆனில் சொல்லும்
போது சக மனிதர்களை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது.
ஏதோ ஒரு மன அழுத்தத்தில் குற்றவாளிகளாகிப் போன அவர்களை
சமூகத்தில் இரண்டறக் கலக்கச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். நாம் அவர்களை
குற்றவாளிகள் என்று ஒதுக்கினால் விடுதலைக்கு பிறகு திரும்பவும் பழைய தொழிலுக்கே சென்று விடுவர். எனவே சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் குற்றப்
பிண்ணனி உள்ள மணமகன், மணமகளை தேர்வு செய்து சமூக பணியாற்ற வேண்டும்..
எனது இந்த யோசனையை மார்க்க அறிஞர்களும், அரசு அதிகாரிகளும் முழு மனதாக ஒத்துக் கொண்டனர். துரித நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நமது நாட்டில் குற்ற பின்னணி உள்ள ஆண் பெண் குறைந்தது 20 சதமாவது
இருக்கும். அரசு இவ்வாறு குற்றப் பின்னணி உள்ளவர்களை திருமணம் செய்து
கொள்பவர்களுக்கு பல உதவிகளை வழங்கி இது போன்ற திருமணங்களை ஊக்குவிக்கலாம்.
குற்றங்கள் மிகக் குறைவாக நடக்கும் சவுதி நாட்டவரே இது பற்றி
கவலைப்படும் போது குற்றங்களே சிலரது வாழ்வாகிக் போன நம் நாட்டுக்கு இது
போன்ற ஒரு மனநிலை மிக அவசியமாகும்.
தகவல் உதவி- சவுதி கெஜட்
சுவனப் பிரியன்
More Stories
உலகளாவிய ரீதியில் சாதனை படைத்த இயாத் முகமது இர்ஷாத்!
சவூதி அரேபியா ரியாத் நகரில் உள்ள, இலங்கை சர்வதேச பாடசாலையில், தரம் 3 இல் கல்வி கற்கும் இயாத் முகமது இர்ஷாத், சர்வதேச சாதனை புத்தகத்தில் தனது...
சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு
50 தொன் எடைகொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்...
துபாய் துணை ஆட்சியாளரும், நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் காலமானார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி அமைச்சரும், துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது 75 ஆவது வயதில் இன்று (24)...
மதீனாவிற்கு உம்ரா யாத்திரை – கோர விபத்தில் 35 பேர் தீயில் கருகி வபாத்
சௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித உம்ரா யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரபூர்வ ஊடகமான செளதி பிரஸ்...
திருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகள் இனி சௌதி விடுதிகளில் தங்கலாம்
சௌதியில் அரேபியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின்படி, வெளிநாடுகளை சேர்ந்த திருமணமாகாத ஜோடிகள் அந்நாட்டின் விடுதிகளில் இனி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, முன்னெப்போதுமில்லாத வகையில் பெண்கள்...
செளதி அரசரின் மெய்க் காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை
செளதி அரசர் சல்மானின் மெய்க் காப்பாளர் `சொந்த பிரச்சனை` காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும்...
Average Rating