
தரையிறங்கும்போது மின் கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்
இந்திய ஆந்திர மாநிலத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் தரையிறங்கும்போது மின் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தோஹாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது.
இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது. தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கியது.
அப்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில், விமானம் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தின் ஓரமாக சென்றது. இதனால் ஓடுபாதையின் ஓரத்தின் உள்ள மின் கம்பத்தில், விமானத்தின் இறக்கை மோதியது. இதில், இறக்கை பாதிப்படைந்தது. மின் கம்பமும் சாய்ந்தது. எனினும் சுதாரித்த பைலட், விமானத்தை அதே இடத்தில் நிறுத்தினார்.
இதனையடுத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
More Stories
மரண தனடனையிலிருந்து தப்பித்த இளைஞன் – சவுதி இளவரசரின் முன்மாதிரி!
கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சவுதி இளவரசர் ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றியதாக சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மறைந்த...
பிரிட்டன் மன்னராக முடி சூடினார் மூன்றாம் சார்ள்ஸ்!
பிரிட்டன் மன்னராக மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் மூன்றாம் சார்ள்ஸ் முடிசூடிக்கொண்டார். மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில்...
இம்ரான் கானுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின்...
8 வயதில் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்த மசூமா!
இந்தியாவின் காஷ்மீர், ஸ்ரீநகரைச் சேர்ந்த மசூமா கோஹர் என்ற 8 வயது சிறுமி முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து முடித்துள்ளார். மா ஷா அல்லாஹ்!
அமெரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாக நதியா கஹ்ப் – குர்ஆனில் கைவைத்து பதவிப் பிரமாணம்!
அமெரிக்காவின் ஹிஜாப் அணிந்த முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாக நதியா கஹ்ப் 23-03-2023 அன்று தனது பெரியம்மாவால் கையால் எழுதப்பட்ட பழங்கால குர்ஆனில் சத்தியப்பிரமாணம் செய்தார். இவர்...
UAE தலைவர் ஷேக் முகமது தனது மகன் காலித்தை பட்டத்து இளவரசராக நியமித்தார்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது மூத்த மகன் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத்தை...