பாவனைக்குதவாத பழ விற்பனை; புறக்கோட்டையில் வர்த்தகர்கள் கைது - Sri Lanka Muslim

பாவனைக்குதவாத பழ விற்பனை; புறக்கோட்டையில் வர்த்தகர்கள் கைது

Contributors

பாவனைக்கு உதவாத பழ வகைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்த 22 வர்த்தகர்கள் புறக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்கள் இணைந்து கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட வர்ததகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team