பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

Read Time:1 Minute, 33 Second

ஜனாதிபதி கோட்டாபய ராஜராஜபக்ஷ முன்னிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous post ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு..!
Next post ‘கோட்டகோகம’ தொடர வேண்டும் – புதிய பிரதமர் ரணில்..!