பொலிஸ் நிலையங்கள் சுயாதீனமாக செயற்படுத்துவதற்கான சூழல் எப்போது உருவாகும்? சஜித்

Read Time:2 Minute, 7 Second

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேதமதாஸ பாராளுமன்றத்தில் 25-10-2013 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அரசாங்கம் எப்போது ஸ்தாபிக்கப்போகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளார்.

பொலிஸ் நிலையங்கள் அரசியல்மயமாக்கப்படுகின்றதால் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என தெரிவித்த சஜித் பிரேமதாஸ பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் பிரதி  தலைவர்கள் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையங்கள் சுயாதீனமாக செயற்படுத்துவதற்கான சூழல் எப்போது உருவாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன, பொலிஸ் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.

Previous post பொதுபல சேனா மீண்டும் பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கிறது – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்
Next post வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – விக்னேஸ்வரன்