
போலிச் செய்திகள் – ஜம்இய்யத்துல் உலமா ஸைபர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரில் போலி செய்திகளை வெளியிட்டமை தொடர்பாக, ஸைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் நேற்று (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா செய்த முறைப்பாடு பின்வருமாறு,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ கடிதம் (லெட்டர் ஹெட்), உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கௌரவத் தலைவர் அவர்களின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் 2022.10.26 ஆம் திகதி (நேற்று) ஸைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.
இதில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர், செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சார்பாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ் ஷைக் எம். ரிபா ஹஸன் மற்றும் மூன்று சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்று இம்முறைப்பாட்டை சமர்ப்பித்தனர்.
இது தொடர்பாக கூடிய விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
More Stories
எதிர்வரும் சில தினங்களில் தென்மேல் பருவமழை ஆரம்பம்!
நாட்டின் எதிர்வரும் சில நாட்களில் தென்மேல் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (03) மேல், சப்ரகமுவ, மத்திய,...
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...