
மஹிந்த மற்றும் ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல தடை!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் 14 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜயரத்ன, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சம்பத் அத்துகோரள, ரேணுகா பெரேரா, சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோருக்கும் இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (9) கோட்டகோகம மற்றும் மைனாகோகம அமைதிப் போராட்டத்தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டகோகம மற்றும் மைனாகோகம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த 17 பேரும் இலங்கையில் பிரசன்னமாக இருக்க வேண்டும் என சட்டமா அதிபர் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
More Stories
இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள்,...
அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!
அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார...
முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற...
கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாறக் மௌலவி வாழ்த்து!
கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி ரணில் விக்ரமசஇங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களையும்...
மீண்டும் கொரோனா அலை?
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும்,...