
மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடைபெறும் – ஐ.தே.க
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதமளவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் பெரும்பாலும் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டில் நடாத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் முனைப்புக்களை ஆளும் கட்சி மேற்கொண்டு வருவதாக ஆளும் கட்சியின் உள்ளத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபைத் தேர்தல்களை விடவும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கே தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியை ஐக்கியப்படுத்தும் நோக்கில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வரலாற்று ரீதியான தியாகத்தை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சியைப் பாதுகாப்பதாக குரல் கொடுக்கும் பலர் உண்மையில் கட்சியின் நலனுக்காக குரல் கொடுப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
More Stories
இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள்,...
அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!
அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார...
முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற...
கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாறக் மௌலவி வாழ்த்து!
கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி ரணில் விக்ரமசஇங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களையும்...
மீண்டும் கொரோனா அலை?
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும்,...