
முரளிக்கு எதிராக கண்டன தீர்மானம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன தீர்மானமொன்று சாவகச்சேரி நகர சபையில் நேற்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, முரளிதரனுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தினை நகர சபை உறுப்பினர் பா.ஸ்ரீதரன் சமர்ப்பித்தார்.
அதனை நகர சபை உறுப்பினர் ஞா.கிNஷhர் வழிமொழிய சபையின் முழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இதன்போது உரையாற்றிய நகரசபை உறுப்பினர் பா.ஸ்ரீதரன்,
“நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட விளையாடிக் கொண்டிருந்த முரளிதரனுக்கு வடக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களும் இளைஞர் யுவதிகள் காணாமல் போனதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அத்துடன், காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்தினையும் தமிழ் மக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக முரளிதரன் கருத்துதெரிவித்துள்ளார். இதனால் தமிழ் மக்கள் மன வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
முரளிதரனால் வடக்கு, கிழக்கில் நடத்தப்படும் கிரிக்கெட் பயிற்சி முகாம்களை நடத்தவிடாமல் தமிழ் மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்படும்” என்றார்.tm
More Stories
இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள்,...
அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!
அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார...
முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற...
கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாறக் மௌலவி வாழ்த்து!
கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி ரணில் விக்ரமசஇங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களையும்...
மீண்டும் கொரோனா அலை?
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும்,...