‘ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்; கைது வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும்’ – சுமந்திரன்!

Read Time:1 Minute, 12 Second

“போராட்டக்காரர்களுக்கு எதிரான கைது வேட்டையை, அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

அவ்வாறு இல்லாவிட்டால் மக்களுடன் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போராடும் உரிமையை எவரும் தடுக்க முடியாது” என்றும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

Previous post பல்துறை கலைஞராக திகழும் ஊடகவியலாளர் சத்தார்!
Next post நல்லிணக்கம், மத ஒருமைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதியால், கோட்டாவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையை தூக்கி எறிய முடியுமா? – ஹக்கீம் கேள்வி!