
நளீம் ஹாஜியாரின் நான்காவது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு
ஜாமியா நளீமியா கலாபீடம் மற்றும் இக்ராஹ் தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்தாபகர் மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் 4 ஆவது அண்டு நினைவுச் சொற்பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 06.00மணிக்கு கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை 4 ஆவது முறையாகவும் நளீமீயாவின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வு ராபீதத்துன் நளீமிய்யீன்களின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ராசீக் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய மறுமலச்சியின் தலைவர் யாக்ஹூத் நளீம்,நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, பிரதிப் பணிப்பாளர் அகார் முஹம்மத், பேராசிரியர்சோ. சுந்திரசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜாமிய்யாவின் பழையமாணவர்கள், கல்வியலாளர்கள் நளிம் ஹாஜியாரின் உறவினர்களென என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
“Knowledge Economy and Sri Lnaka Muslim” கல்விப் பொருளாதார அறிவும் இலங்கையின் முஸ்லிம்களும் எனும் தலைப்பில் பேராசிரியர் சந்திரசேகரம் பிரதான உரை நிகழ்த்தினார்.
இந்த நாட்டில் கல்விக்காக பணியாற்றிய அறிஞர் சித்திலெப்பை, ஜ.எல். அப்துல் அசீஸ், ரீ.பி ஜாயா,கலாநிதி அசீஸ், ஆகியோர் வரிசையில் நளீம் ஹாஜியாரும் இடம் பிடித்துள்ளார். நளீம் ஹாஜியாரின் கல்விச் சேவைக்காக நாம் அவரை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம் என கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
கலாநிதி அசீஸ் மற்றும் கலாநிதி ரீ.பி ஜாயா ஆகியோருக்கு மன்றங்கள் அமைத்து வருடந்தம் நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் நளீம் ஹாஜியாரையும் ஜாமிய்யா பழைய மாணவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர் என கலாநிதி சுக்ரி மேலும் தெரிவித்தார்.(meelpa.nt)
More Stories
மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02ஆவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. அரபுக் கல்லூரியின் தலைவர்...
ஜனாஸா எரிப்பு; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?
கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழையான தீர்மானம் மேற்கொண்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், பிழையான தீர்மானம் மேற்கொண்ட...
வவுனியா, புதிய சாளம்பைக்குளம் – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி!
வவுனியா, புதிய சாளம்பைக்குளம், அல்-அமான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இடம்பெற்ற கலை, கலச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை...
ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை (29) தாராபுரம், அல்-மினா மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அரபுக்கல்லூரியின் அதிபர்களான இல்ஹாம்,...
கொழும்பு ஜாவத்த ஜும்ஆ பள்ளிவாசலின் பாராட்டத்தக்க செயற்பாடுகள்!
கொழும்பு ஜாவத்தயில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்றிரவு தராவீஹ் தொழுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. அப்பள்ளிவாசலின் நேர்த்தியும், அழகும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. தொழுகையில் ஈடுபட்ட பொழுது ஜமாஅத் தொழுகை...
கைகோர்த்து எமது சமூக தாயை காப்போம் வா தோழா!
தன்னுடைய இளம் சந்ததியினரை நாகரிக அறியாமையில் (Civilized Ignorance) இருப்பதைச் சமுதாயம் விரும்புவதில்லை. சமூகம், பண்பாடு, சமயம்,கல்வி மற்றும் பிறதுறைகளில் அடைந்த அடைவுகளை அடுத்த தலைமுறைக்கு (Future...