
நிந்தவூர், அல் – அஷ்றக் தேசிய பாடசாலை கபடி அணியினர் வரலாற்று சாதனை!
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில், ஒக்டோபர் 29, 30ஆம் திகதிகளில், கேகாலையில் நடைபெற்ற கபடி போட்டியில், நிந்தவூர் அல் – அஷ்றக் தேசிய பாடசாலையின் 17 வயது கபடி அணியினர் வெள்ளி பதக்கமும், 20 வயது கபடி அணியினர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வரலாற்றில் முதல் முறையாக, இரு வயதுப் பிரிவு கபடி அணிகளும், அகில இலங்கை மட்டத்தில் பதக்கம் வென்று சாதனை படைத்து வரலாற்றில் தடம் பதித்துள்ளனர்.
இவ்வகையில், இவ்வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களையும் பயிற்சிகள் வழங்கிய பயிற்றுவிப்பாளர்களும் ஆசிரியர்களுமான ஏ.ஹலீம் அஹ்மத், எம்.எஸ்.எம்.சபீர், ஏ.எம்.அன்ஸார், இன்பாத் மௌலானா ஆகியோருக்கும் விளையாட்டுக் குழு ஆசிரியர்களுக்கும், வீரர்களின் பெற்றோர்களுக்கும் கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் கபூர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை, பல வழிகளிலும் உதவிகள் புரிந்த பழைய மாணவர்கள் சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
More Stories
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...
அதிக மின்கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை!
ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள்...