
பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கமர்த்துவதற்கான பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி!
பட்டதாரிகளை அரச சேவையில் ஆசிரியர்களாக பணியமர்த்துவதற்கான பரீட்சையை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகளை அனுப்பவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இத்தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மற்றும் மாகாண பள்ளிகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப தேவையான பட்டதாரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.
அதன் பின் ஏற்படும் வெற்றிடங்களுக்கு மாகாண அடிப்படையில் மாகாண சபை பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும்.
More Stories
எதிர்வரும் சில தினங்களில் தென்மேல் பருவமழை ஆரம்பம்!
நாட்டின் எதிர்வரும் சில நாட்களில் தென்மேல் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (03) மேல், சப்ரகமுவ, மத்திய,...
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...