
பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்?
பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் இந்த ஆண்டில் இலங்கைக்க விஜயம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் பாப்பாண்டவர் பிரான்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பு தொடர்பில் 2015ம் ஆண்டில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பாப்பாண்டவர் விஜயம் செய்வார் எனவும், எனினும் இந்த ஆண்டில் விஜயம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் வத்திக்கான் பேச்சாளர் வணக்கத்திற்குரிய பெட்ரிக்கோ லம்பார்டி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஆகஸ்ட் மாதம், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பாப்பாண்டவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எழுத்து மூலமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் பாப்பாண்டவரைச் சந்தித்து ஜனாதிபதியின் அழைப்பு குறித்து அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
More Stories
எதிர்வரும் சில தினங்களில் தென்மேல் பருவமழை ஆரம்பம்!
நாட்டின் எதிர்வரும் சில நாட்களில் தென்மேல் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (03) மேல், சப்ரகமுவ, மத்திய,...
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...