
பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கோரியுள்ளது . அக் கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இக் கோரிக்கை விடுத்துள்ளார்.
261 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் அடங்கியிருந்த கொள்கலனை விடுவிக்குமாறு கோரிய அதிகாரியின் பெயரை, பிரதமர் உடனடியாக வெளியிடத் தவறினால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும்.
கொள்கலனை விடுவிப்பதில் தொடர்புடைய அதிகாரிகளின் விபரங்களை வெளியிடுவது பிரதமரின் கடமை. பௌத்த மதத்தை அழிக்கும் மையமாக புத்தசாசன அமைச்சு மாறியுள்ளது.
தனக்குக கீழ் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடத் தயங்கினால், பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை அவர் பாதுகாக்கக் கூடாது”
அதேவேளை , குறிப்பிட்ட போதைப்பொருள் கொள்கலனை விடுவிக்கக் கோரி கடிதம் கொடுக்கும்படி, பிரதமரே தமக்குப் பணித்ததாக, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள அவரது இணைப்புச் செயலர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதக தெரிவிக்கப் படுக்கிறது
More Stories
எதிர்வரும் சில தினங்களில் தென்மேல் பருவமழை ஆரம்பம்!
நாட்டின் எதிர்வரும் சில நாட்களில் தென்மேல் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (03) மேல், சப்ரகமுவ, மத்திய,...
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...