
பிரித்தானிய மகாராணியின்இறுதிக் கிரியைகள் இன்று!
பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று (19) இடம்பெறவுள்ளது.
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில்ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியின் கணவர் மன்னர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகே இன்று 19ஆம் திகதி மகாராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், அரச குடும்பம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி சடங்கில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரித்தானிய எம்ஐ5மற்றும் எம்ஐ6உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர பொலிஸ் மற்றும் இரகசிய சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மகாராணியின் இறுதி சடங்கில் சுமார் 7.5இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
More Stories
இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள்,...
அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!
அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார...
முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற...
கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாறக் மௌலவி வாழ்த்து!
கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி ரணில் விக்ரமசஇங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களையும்...
மீண்டும் கொரோனா அலை?
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும்,...