
வங்கதேசம் செல்லும் இலங்கை அணி
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாட உள்ளது.
வங்கதேசத்துக்கு வருகிற 27ம் திகதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டுவென்டி- 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
அரசியல் பிரச்னை காரணமாக அவ்வப்போது வங்கதேசத்தில் கலவரம் நடப்பதால் பாதுகாப்பு கருதி இலங்கை அணி, வங்கதேசம் செல்லுமா? என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.
அங்குள்ள நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தங்கள் நாட்டு வாரியத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதில் திருப்தி தெரிவித்து இருப்பதால், இலங்கை அணியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
More Stories
குறையும் கேஸ் விலை!
12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லிட்ரோ நிறுவனத் தலைவர்...
இலங்கை வருகிறார் கலீத் அல் அம்ரி!
சிறந்த சமூக ஊடக செல்வாக்குமிக்க கலீத் அல் அம்ரி ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கலீத் அல் அம்ரி ஒரு பிரபலமான பதிவாளர்,...
‘அலி சப்ரி ரஹீம் எம்.பி பதவிக்கு தகுதியற்றவர்; அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை’ – மார்ச் 12 இயக்கம் கவலை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச...
கொழும்பில் போலி வர்த்தகநாம ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் சோதனை!
உலகப் புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் என்ற போர்வையில், தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைவிற்பனையகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது. கொழும்பு,...
அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் கை மாற வேண்டும் – வஜிர!
பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டதை போன்று, புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில்...
அதிக மின்கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை!
ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள்...