வரி திருத்தத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்தம்!

Read Time:1 Minute, 48 Second

வரி திருத்தத்திற்கு எதிராக நான்கு மாகாணங்களிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (13 ) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

இதேவேளை, ஏனைய பல மாகாணங்களின் உறுப்பினர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், அவசர சேவைகள் பாதிக்கப்படாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ மருத்துவமனைகள் ஆகியவற்றில் வேலைநிறுத்தம் பாதிக்கப்படாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், புதன்கிழமை முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous post “தேர்தலை கண்டு எமக்கு அச்சமில்லை” – மஹிந்த!
Next post விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை!