கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் 172 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 43 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4387 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரையில் 13,875 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

கொரோனா வைரஸ் மருந்து ‘ரெம்டிசிவிர்’: விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும்

வைரஸ் கொல்லி மருந்தான ‘ரெம்டிசிவிர்’ விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. கோவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு அதில் பாதுகாப்பு, ஆற்றல், நிலைத்தன்மை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, தீவிர பாதிப்புக்குள்ளான கொரோனா நோயாளிகளுக்கு அவசரநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்த மருந்தினை அளிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் (டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா) சமீபத்தில் தெரிவித்திருந்தார். விளம்பரம் இந்த மருந்தினை இந்தியாவிலேயே தயாரிக்கவும், விற்கவும் அனுமதி…

Read More

சென்னையில் மாயமான 277 கொரோனா தொற்றாளர்கள்

சென்னையில் தவறான முகவரியைக் கொடுத்துவிட்டு 277 கொரோனா தொற்றாளர்கள் மாயமாகி உள்ளனர். இதனால் மற்றவர்களுக்குத் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம்…

Read More

சஹ்ரானுக்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தங்களது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாகவும்…

Read More