ஆளும் கட்சிக்குள் பிளவு – டிலான் பெரேரா தகவல்..!

இலங்கையில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று நெருக்கடியானது, ஆளும் கட்சிக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை இராணுவத்தின் வசமுள்ள கொவிட் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறைக்கு வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆணடு மார்ச் 11ஆம் திகதி கொரோனா தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டதில் இருந்து கொவிட் ஒழிப்பு பணிகளை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்தார்….

Read More

சோபையிழந்த வெசாக் : வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காவலரண்கள்..!

நூருல் ஹுதா உமர் வெசாக் தினத்தை முன்னிட்டு கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் உட்பட ஏனைய பிரதேச பொலிஸ் நிலையங்கள், காரைதீவு, பெரியநீலாவணை பாதுகாப்பு படை காவலரண்கள், அம்பாறை மாவட்ட சில அரச காரியாலயங்கள், அரச வர்த்தக நிலையங்களில் பல வர்ண அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் என பலரும் இணைந்து இந்த வெசாக் கூடுகளை தத்தமது பாதுகாப்பு அரண்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். நாட்டில் பரவலாக அதிகரித்து வரும் கொரோனா அலையின் காரணமாக…

Read More

வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை ஜூன் 01 முதல் நீக்கம்..!

வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இலங்கையிலிருந்து இந்தியா சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானசேவைகள் அதிகார சபைத் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். அவ்வாறே, இலங்கை வரும் விமானமொன்றில் 75 பயணிகள் மாத்திரமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக சிவில் விமான சேவைகள்…

Read More

புதிய சட்டமா அதிபராக பதவியேற்றார் சஞ்சய் ராஜரட்ணம்..!

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவியேற்றார். இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபராவார். இவர் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 24ஆம் திகதியுடன் தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்ற பேரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டு நாடாளுமன்ற பேரவை இணக்கம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்..!

மாளிகைக்காடு நிருபர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று முதல் பதினான்கு நாட்களுக்கு சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (26) புதன் கிழமை, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அயலவர் ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவரை தனது வாகனத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். குறிப்பிட்ட சுகயீனமான நபர் கொறோனா தொற்றாளராக இனம் காணப்பட்டமையினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி…

Read More

பற்றி எரியும் கப்பலில் இருந்து கரையொதுங்கும் சிதைவுகள்..!

கொழும்பு துறைமுகம் அருகில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் வெளிநாட்டுக் கப்பலில் இருந்து வெளியாகிய எண்ணெய் மற்றும் சில சிதைந்த பொருட்கள் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் ஒதுங்கியுள்ளன. இதற்கமைய நீர்கொழும்பு, ஜா-எல, கப்புகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்கரைகளில் இவ்வாறு பொருட்களையும் எண்ணெய் சேர்ந்த நீரையும் காணமுடிவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய கடலோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை ஒன்றையும் நேற்று அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More

அம்பாறையை சேர்ந்த மற்றுமொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்..!

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த தகவலை பொலிஸ் சேப்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார். அம்பாறையை சேர்ந்த முகமட் ரிகாஸ் என்பவரே தப்பிச்சென்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த நபர் குறித்த தகவல்களை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு பொதுமக்களை பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை…

Read More

சீனாவிலிருந்து புறப்பட்டு அதிகாலையில் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சிறப்பு விமானம்..!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இலங்கை எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த தடுப்பூசிகள் பெய்ஜிங்கிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு தரையிறங்கின. இந்த தடுப்பூசிகளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்….

Read More

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரியும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் என்ன நடக்கும்..?

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் இரசாயனக் கப்பலில் இருந்து இருந்து ஏதேனும் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அது நீர்கொழும்பு குளத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர நேற்று தெரிவித்தார். கப்பலில் இருந்து இதுவரை எந்த எண்ணெய் கசிவையும் கண்டுபிடிக்கவில்லை என்றும், எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர்கள் நன்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். நாங்கள் நீர்கொழும்பு குளம் அருகே…

Read More

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்..!

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 அவசர நிலைமை…

Read More

பூசா முகாமிலிருந்து கொரோனா ‘கைதி’ தப்பியோட்டம்..!

பூசா முகாமில் கொரொனா தொற்றுக்குள்ளாகியிருந்த கைதி தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் பேருந்திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய நபரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிக்கிறார்.

Read More

சுகாதார அமைச்சர் பவித்ரா அமைச்சுப் பதவியை விட்டு விலக வேண்டும், மருத்துவர்கள் கோரிக்கை..!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதவியை விட்டு விலக வேண்டும் என எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது அரச மருத்துவர்கள் அமைப்பான GMOF (Government Medical Officers Forum) . 16 மாதங்களாக சுகாதார அமைச்சராக பதவி வகித்தும் கொரோனா சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதில் சரியான தலைமைத்துவத்தையோ வழி காட்டலையோ ஒத்துழைப்பையோ அவர் தரவில்லையென குறித்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விஞ்ஞானத்துக்கு பதிலாக புராண நம்பிக்கையை முற்படுத்தி மக்களை பிழையான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள குறித்த அமைப்பு பவித்ராவை…

Read More