திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு..!

எப்.முபாரக்  திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமோர் நிகழ்வு  இன்று(9) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முஸ்லிம் எய்ட் நிறுவனம் 3000 ரூபா பெறுமதியான 250 உலர்உணவுப்பொதிகளை இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்ஜிடம் வழங்கி வைத்தது. இப்பொதிகள்  யாவும் மேலதிக அரசாங்க அதிபரால்  திருகோணமலை பட்டினமும் சூழலும்…

Read More

சீன ரொக்கட் இந்திய பெருங்கடலில் விழுந்தது, இலங்கைக்கு பாதிப்பில்லை, சுனாமியும் ஏற்படாது..!

கடந்த சில நாள்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வௌியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கட்டின்  சில பாகங்கள், இன்று காலை 8.50 மணியளவில் இந்திய பெருங்கடலில் வீழ்ந்துள்ளதென, சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின், மாலைத்தீவுக்கு வடக்கில் இது விழுந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த கடல் பரப்பில் இதுவரை சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 தொன் நிறையுள்ள குறித்த ரொக்கட்டானது, 30 வருடங்களுக்குப் பிறகு விண்வௌியிலிருந்து பூமியில்…

Read More

மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் – ஹனீபா மதனி கர்தினாலுக்கு கடிதம்..!

2014ஆம் ஆண்டு அளுத்­க­மையில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­தற்கு பதி­ல­டி­யாக அல்­லது நியூ­ஸி­லாந்து கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்தில் உள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தற்கு பதி­ல­டி­யா­கவே ஈஸ்டர் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று கூற முற்­ப­டு­வது மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போடு­வ­தா­கவே அமை­கின்­றது என தேசிய ஐக்­கி­யத்­துக்­கான முஸ்லிம் பேர­வையின் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரி­வித்­துள்ளார். கொழும்பு மாவட்ட பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்­சித்­துக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அக் கடி­தத்தில்…

Read More

வார்த்தெடுக்கப்பட்ட திராவிட வாரிசு; பி.ஜே.பி ஆசைகள் அஸ்தமனம்..!

-சுஐப் எம்.காசிம்- இந்திய அரசியலில் மாநில அரசுகள் பேசப்படுவதுதான் அதிகம். அந்தளவுக்கு இவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் நிதி, நீதி விவகாரங்கள் தவிர அனைத்திலும் மாநிலங்களின் மன நிலைகளைப் பொறுத்துத்தான் அரசியலும், ஆட்சியும் நகருகிறது. இருந்தாலும் உள்ளூர் காவல்துறை மாநில அரசுக்குள் இயங்குவதும், தேவை ஏற்படின் வெளிநாடுகளில் வரவுள்ள நிதிகளைப் பெற்றுத்தருமாறு மத்திய அரசாங்கத்தைக் கோரும் தைரியங்களும் இந்த மாநிலங்களிடம் இருக்கின்றன. இத்தனையும் ஒட்டுமொத்த வாய்ப்பாக இருக்க வேண்டுமானால், மத்திய அரசின் பங்காளியாக இருந்துவிட்டால் போதும்….

Read More

இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள 1,600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே?

இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உண்மையில் நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தேன். ஏன் என்றால் எனக்கு 30 வயது. என்னை விட தேவை உள்ளவர்கள் கூடுதலாக இருக்கும் போது…

Read More

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முஸ்லிம்கள் மீது பலிசுமத்தப்படுவது ஒரு நியாயமான செயல் அல்ல..!

கடந்த ஆண்டில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதலை எடுத்து கொண்டால் ஈஸ்டர் தாக்குதலிலே கருவிகலாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தில் இருந்தவர்கள். இதில் ஸஹ்ரான் குழுவினர் முஸ்லீம்களாக இருந்திருக்கின்றனர். எனவே முஸ்லிம்களுக்கு இதில் முற்று முழுதாக பங்கு இல்லை என்று பொறுப்பு துரக்க முடியாது. இவர்கள் இயக்கப்பட்டு இருக்கின்றனர். வேறு சிலர் தீய சக்திகள் அவர்களது அரசியல் தேவைகளுக்காக ஓரிரு தேவைக்காக…

Read More

பேருவளை ஜாமியா நளீமியா, தற்காலிக கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்..!

பேருவளை ஜாமியா நளீமியா கல்வி நிறுவனம், தற்காலிக கொரோனா சிகிச்சை நிலையமாக  மாற்றப்பட்டுள்ளது. 270 பேர் சிகிச்சை பெறும் வகையில் இதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், மட்டக்களப்பு கம்பஸ் இவ்வாறு சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டிருந்த அதேவேளை நாட்டின் நலன் கருதி தாமரை தடாகத்தினையும் சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

Read More

கொ​ரோனா பீதியால் பாராளுமன்ற சபாநாயகர் காரியாலயம் மூடப்பட்டது..!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணியாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில், சபாநாயகரின் காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்துடன் அந்த காரியாலயத்தில் பணியாற்றிய பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சபாநாயகர் அந்தக் காரியாலயத்துக்கு வருகைதருவதை தவிர்த்துவிட்டார்.

Read More

புர்க்கா தடையானது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது – பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்..!

-சில்மியா யூசுப் புர்கா தடை முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமான ஒன்று என்பது என் கருத்து. ஏனெனில்  எதிர்காலத்தில் புர்காஎன்பது  முஸ்லிம்கள் மீது  பயங்கரவாத பழி சுமத்தும் சாதனமாக அமையக் கூடும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.  மேலும் அவர் தெரிவிக்கையில், “கடந்த  பல தசாப்தங்களாக புலிகளின்  காலம் தொட்டு ஸஹ்ரான் என்னும் பயங்கரவாதியின் ஈஸ்டர்   தாக்குதல் வரை நமது  நாடு  பயங்கரவாத நிலமைக்கு  முகம் கொடுத்து வந்துள்ளது. அதனால் இலங்கையின்…

Read More

பெரிய சீன ராக்கெட் பிரிவு இந்த வார இறுதியில் பூமியில் விழ உள்ளது..!

ஒரு சீன ராக்கெட்டிலிருந்து குப்பைகள் இந்த வார இறுதியில் கட்டுப்பாடற்ற மறு நுழைவில் பூமிக்கு விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாங் மார்ச் -5 பி வாகனத்தின் முக்கிய பிரிவு கடந்த மாதம் சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை அறிமுகப்படுத்த பயன்படுத்தப்பட்டது.18 டன்களில் இது வளிமண்டலத்தில் ஒரு திசைதிருப்பப்படாத பல தசாப்தங்களில் மிகப்பெரிய பொருட்களில் ஒன்றாகும். வியாழக்கிழமை அமெரிக்கா பொருளின் பாதையை கவனிப்பதாகக் கூறியது, ஆனால் தற்போது அதைச் சுடும் திட்டம் எதுவும் இல்லை.“இது யாருக்கும்…

Read More

தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் நாடு முழுமையாக மூடப்படலாம்..!

தேவைப்பட்டால், எதிர்காலத்தில் நாடு மூடப்படலாம் என தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். தேவைக்கு ஏற்றவாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் மூடும் அதிகாரம் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Read More

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 24 பொலிஸாருக்கு கொரோனா..!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் 24 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட தீர்மானம்..!

சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும் அனைத்து பங்களாக்களையும் மூட வன பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போதைய கொவிட் -19 தொற்று நோயின் அவதான நிலையை கருத்திற் கொண்டு மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படாது என வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார். வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து சுற்றுலா முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை கடந்த 5 ஆம் திகதி முதல் மூட…

Read More

நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்..!

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு, அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக – தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்துக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்….

Read More

ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக கிண்ணியா பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிண்ணியா பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மியினால் முன்வைக்கப்பட்ட பிரேரனை, சபையில் ஏகமனதாக ஏற்று, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிண்ணியா பிரதேச சபையின் மே மாதத்திற்கான 41வது மாதாந்த சபை அமர்வு, இன்று (07) காலை 9.00 மணிக்கு, தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மக்கள் காங்கிரஸ்…

Read More

சம்மாந்துறையில் அண்டிஜன் பரிசோதனை..!

சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம் நாட்டிலும், கிழக்கிலும் பரவலாக பரவிவரும் கோரோனோ அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த வியாழக்கிழமை (06) சம்மாந்துறை பிரதேச வீதியோர வியாபாரிகள்,பொதுமக்கள் அதிகமாக கூடும்  இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர்,முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் வழிகாட்டுதலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் தலைமையில்  பொது…

Read More

எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம்..!

எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே பிரதமர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கோவிட் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் எனப் பல சவால்கள் எம்மைச் சூழ்ந்துள்ளன. அனைத்துச் சவால்களையும் முறியடித்து…

Read More

கொரோனா பொசிட்டிவ் என்றதும், தொலைபேசியை துண்டிக்காதீர்கள் ..!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அறிந்தவுடன், சிலர் தமது அலைபேசிகளை நிறுத்திவிடுவதாகவும் சமூகத்தில் மேலும் தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கு இது ஒரு காரணியாக அமைவதாகவும், சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தாமத நிலைக்கு, பொதுமக்கள் பொறுப்புணர்ந்துச் செயற்படாததே காரணம் என்றும் சாடினார். “நான் தொற்றாளராக இனங்காணப்பட்டால் எனது பிள்ளைகள், மனைவி, அயலவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு பிரதேசத்தில் 10 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால்,…

Read More

மறு அறிவித்தல் வரை அனைத்துப் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு பூட்டு..!

மறு அறிவித்தல் வரை அனைத்து பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், முன் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளார் கல்வியமைச்சர். தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் பாதுகாப்பு நிமித்தம் சுகாதார மற்றும் கல்வியதிகாரிகள் இணைந்து இம்முடிவை எட்டியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மைய தினங்களாக தினசரி 1500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமையும் அது 2000 தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

ரிஷாட் பதியுதீனுக்கு விசாரனைகள் இடம்பெறுகின்றதா..? ருஸ்தி ஹபீப் விளக்கம்..!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் விசாரிக்கப்படுகின்றாரா? – அவரை பார்வையிட்ட சட்டத்தரணி ருஷ்தி விளக்குகிறார்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும், அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே அவ்வப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்சியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ்…

Read More

இப்தாரில் நடந்தது என்ன..? இக்கட்டில் தள்ள வேண்டாமென்கிறார் ஹரீஸ்..!

நேற்று (05) பிரதமர் மஹிந்த அவர்களுடனான எங்களின் சந்திப்பு தொடர்பில் முகநூல் நண்பர்களும் இன்னும் சிலரும் சமூகவலைத்தளங்களில் பிழையான கருத்துக்களை கூறி வருகின்றனர். உண்மையில் நடந்தது என்னவென்றால் நேற்று பாராளுமன்ற அமர்வு நடைபெற்று கொண்டிருந்த போது இந்த நாட்டிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், டெலோ உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அவர்களின் எம்.பிக்கள் சகலரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்…

Read More

மாலைத்தீவு குண்டுத் தாக்குதலில் நஷீத் காயம்..!

மாலை தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மத் நஷீத், அவரது வீட்டருகே இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைதீவு அசியல் தளம்பல் நிலையில் காணப்படுகின்ற அதேவேளை, இவ்வாறான தாக்குதல்கள் கோழைத்தனமானது என வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் கருத்து வெளியிட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்..!

ஏ.எல்.தவம் சகோ. றிசாட் தடுப்புக்காவலில் நோன்பு பிடிக்கவே சரியான வசதியில்லாத நிலையில் இருக்கிறார். அவரது விடுதலை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் – றிசாட்டை நோன்புடைய காலத்தில் கைதுசெய்தவர்களோடு எம்.பிக்கள் அலறி மாளிகையில் ஆடம்பரமாக நோன்பு திறக்கிறார்கள். றிசாட்டை பாராளுமன்றத்திற்கு கூட்டி வருவதில் சட்டச் சிக்கலில்லை என சட்டமா அதிபர் கூறிய பின்னரும் – கூட்டி வர அனுமதிக்க முடியாது என – அரசாங்க அமைச்சரும் சபாநாயகரும் மறுக்கின்ற போது – அதனை எதிர்த்துக் கேள்வி கேட்க…

Read More

இரவு பகல் பாராது களத்தில் சுகாதார தரப்பினர், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை !

சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  ஆகியோரின் கண்காணிப்பில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக்  நெறிப்படுத்திலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  தலைமையிலான இளைஞர் குழு, பாதுகாப்பு படையினர் இணைந்து சம்மாந்துறை  பிரதேசத்தில் கொவிட்-19 யினை கட்டுப்படுத்துமுகமாக பொது இடங்களுக்கு இன்று(05) இரவு திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.இதன்போது…

Read More

பிரதமரின் இப்தாரில், பங்கேற்றமை விசேட அம்சமாகும் – 20 ஐ ஆதரித்த முஸ்லிம் Mp கள் தெரிவிப்பு..!

முஸ்லிம் மக்கள் சார்பாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் நேற்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது. முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது…

Read More