இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கின்றது..!

நாட்டில் உள்ள அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இன்று முதல் பாண், பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தொழில்வாய்ப்பு பெரும் பிரச்சினையாக இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த…

Read More

மீண்டும் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படப்போகின்றதா?

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு இருக்க வேண்டும் என அமைச்சரும் அதிகாரிகளும் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சாத்தியம் ஏற்பட்டால் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரிக்கவில்லை. நாட்டின் தொற்று நிலைமை மற்றும்…

Read More

எரிபொருள் விலையேற்றம் வேறு வழி இன்றி எடுக்கப்பட்ட முடிவு, ஒப்புக் கொண்டார் பிரதமர்..!

எரிபொருட்களின் விலையேற்றம் தற்காலிமானது என்றும் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தவுடன் இலங்கையிலும் விலை குறைக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அவர் விளக்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டத்திற்கு மேல் நட்டத்தை சந்தித்து வருவதால் வேறு வழியின்றி எரிபொருள் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளது. எனினும் இது தற்காலிகமான விலை ஏற்றமாகும். உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்த உடனேயே இலங்கையிலும் எரிபொருள்…

Read More

ஆட்சி பீடமேற்றிய தேரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முரண்பட்டுக்கொள்ளும் ராஜபக்ஷாக்கள்..!

பௌத்த தேரர்களுடன், தற்போது ஆட்சியமைத்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் , தொடர்ந்தும் முரண்டு வருவதாக தென்னிலங்கை  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் நாரஹென்பிட்டி  அபயராம விகாரையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், எவ்வித அறிவிப்புமின்றி திடீரென அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக  வைத்திய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, தான் அந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கவில்லை என பகிரங்கமாக…

Read More

மக்கள் வீதிக்கு இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முடியப்போகிறது..! 

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பேசியதாவது, மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்துடன் அத்துடன் முடிந்து விடும் என்பதே…

Read More

சம்மாந்துறை தைக்கா பள்ளி வளாகத்தில் மஞ்சள் அறுவடை….!

சம்மாந்துறை நிருபர் சம்மாந்துறை தைக்கா பள்ளி வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கையானது வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது. சம்மாந்துறை தைக்கா பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம் சஹீட் அவர்களின் தலைமையில் இவ் மஞ்சள் அறுவடை இன்று (13 )இடம்பெற்றது. பள்ளிவாசல் வளாகத்தில் மொத்தமாக ஒன்பது பாத்திகளில் இவ் பயிர்ச் செய்கையிடப்பட்டது.அதில் இரண்டு பாத்திகளில் இருந்து 65kg அளவிலான மஞ்சள் இதன் போது அறுவடை செய்யப்பட்டது. இவ் அறுவடை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி…

Read More

எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு – அமைச்சர் உதய கம்மன்பில..!

எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், எரிபொருட்களுக்கான விலை உயர்வுக்கு நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலுக்குப் பிறகு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. “நிதியமைச்சராக பிரதமர் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக் குழுவால்…

Read More

50 நாட்களாகியும், காரணமின்றி காவலில் வைத்திருப்பது ஏன்..?

ஜனநாயகத்தையும் சந்தேகிக்குமளவுக்கு, எல்லைமீறிச் சென்றுள்ள இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தால் சர்வதேசம் பாரிய அதிருப்தியடைந்துள்ளதையே, ஐரோப்பிய யூனியனின் எச்சரிக்கை காட்டுவதாக, ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசியலில் தனிப்பட்டோரைப் பழிதீர்க்கப் பயன்படுத்தப்படுவதாகவும் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு, இன்றுடன் ஐம்பது நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்த1200 மணித்தியாலங்களில், எந்தத் துப்புத்தகவல்களும் இவரிடமிருந்து பெறப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தால்தானே பெறமுடியும். ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை…

Read More

குடும்ப ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்புவோம் – சுமந்திரன் சூளுரை..!

தற்போதைய ஆட்சியாளர்கள் தமது கோரமான ஆட்சியினை கைவிடாவிட்டால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கமானது மக்கள் மீது அடக்குமுறைகளை வன்முறைகளைப் பிரயோகித்து மக்களை அடக்கியாள நினைக்கின்றது அதாவது குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு பாடுபடுகிறது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசாங்கம் எதிர்காலத்திலாவது…

Read More

எரிபொருளின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்..!

எண்ணெய் விலை அதிகரிப்பை எதிர்த்து குருநாகல் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல அவர்களின் ஏற்ப்பாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

ஜூலை 2 வரையில் பயணத்தடையை நீடிக்க அரசாங்கம் தீவிர பரிசீலனை..!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி வரையில் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பு உள்ளிட்ட நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, ஜுன் மாதம் 14ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு அமுல்படுத்துமாறு இலங்கை வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை…

Read More

அமைச்சுக்களின் செயலாளர்கள் கடமைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்படுவர்..!

அமைச்சுக்களின் அபிவிருத்தி பணிகளுக்கு அக்கறை காட்டாத மற்றும் ஒத்துழைப்புகளை வழங்காத அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த பிரதான அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி வீடுகளிலேயே தங்கியுள்ளனர் எனவும், எந்த பணிகளையும் செய்வதில்லை என்றாலும் அனைவரும் சம்பளத்தை மாத்திரம் பெற்றுக்கொள்வதாக அமைச்சர்கள் பலர் செய்த முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நியமனங்களை தான்…

Read More

அமைச்சர் கம்மன்பிலவுக்கு வந்த அடுத்த சோதனை, சிங்கப்பூர் வங்கிக் கணக்கு சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பமா..!

அமைச்சர் உதய கம்மன்பிலவின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு சம்பந்தமான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பல மில்லியன் டொலர் தரகு பணம் சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் வைப்புச் செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தேவைக்கு அமைய இலங்கையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் ஒன்றை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சிங்கப்பூர் நிறுவனம் கடந்த…

Read More

எரிபொருள் விலை குறித்த SLPP யின் அறிக்கை: நான்கு கேள்விகளுக்கான பதில்களைக் கோரும் எதிர் கட்சித் தலைவர்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு அறிக்கையில் எரிபொருள் விலை உயர்வு என்பது ஒரு ஆளுகை முடிவு என்றும், இது எஸ்.எல்.பி.பி கூறியது போல் பொறுப்பான அமைச்சரால் மட்டுமே எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார். SLPP க்கு நான்கு கேள்விகளை முன்வைத்து, எரிபொருள் விலையை குறைக்க எதிர்க்கட்சித் தலைவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

சமையல் எரிவாயுவின் விலையை 700 ரூபாவினால் அதிகரிக்க அமைச்சிடம் கோரிக்கை..!

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 700 ரூபாவினால் அதிகரிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனினும் அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததுடன், முன்வைக்கப்பட்டுள்ள விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த குழு ஊடாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் விரிவான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இந்த…

Read More

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அமைச்சர் கமன்பிலாவின் பதில்..!

பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் கையெழுத்திட்ட கடிதத்திற்கு பதிலளிக்க அமைச்சர் உதய கம்மன்பிலா தயாராகி வருகிறார். சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறும் என்று அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read More

கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை..!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் அவர்களின் தலைமையில் இன்று இரவு ஒலிபெருக்கியில் கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்த தடுப்பூசியானது முதற்கட்டமாக 60 வயதை தாண்டியவர்கள் மற்றும் பொது மக்களுடன் கள நேரடி தொர்பினை வைத்திருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக…

Read More

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா கம்மன்பில..?

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உணவைக்கூட முறையாக உண்ண வழியின்றி பலர் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் திடீரென நேற்றிரவு எரி பொருட்களின் விலை அதிகரித்தது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான கையோடு அடுத்துவரும் நாட்களில் ஏனைய சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயரக்கூடும் என்பதை மக்கள் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டனர். இதனால் எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதனை மீளப்பெறுமாறும்…

Read More

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்காதே என பிரிட்டனில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம்..!

கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து பிரிட்டனின் கார்ன்வாலில் உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஜி7 மாநாடு தொடங்கியது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும்,  ஜி 7 நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பதை நிறுத்தக் கோரியும் லண்டனில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்   இன்று  12.06.2021 சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காண்கிறீர்கள்.

Read More

நாடு முழுவதும் சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் குவிப்பு..!

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்று ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் பலரின் நடத்தை திருப்திகரமாக இருப்பதாக அவர் கூறுகிறார், ஆனால் சிலரின் நடத்தை வருந்தத்தக்கது. அத்தியாவசிய தேவைகளைத்…

Read More

முன்வரிசையில் அநுரகுமாரவுக்கு பக்கத்தில், ரணிலுக்கு ஆசனம்..!

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொதுத் ​தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப் பட்டியல் கிடைத்தது. அப்பட்டியல் நிரப்பப்படாமலே இருந்தது. இந்நிலையிலே​யே, கட்சியின் தலைவ​ரையே நியமிப்பதற்கு செயற்குழு கடந்தவாரம் தீர்மானித்திருந்தது. அதனடிப்படையிலேயே, எதிர்வரும் 22ஆம் திகதியன்று அவர், சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அவருக்கு எதிரணியில் முன்வரிசையில் ஆசனத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்றத்துக்கு…

Read More

400 பில்லியனை மக்களிடம் கொள்ளையடித்த அரசாங்கம் – ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்..!

அரசாங்கம் சுமார் 400 பில்லியன் ரூபாவை மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். 2018ம் ஆண்டு தான் அறிமுகம் செய்த எரிபொருள் சூத்திரம் நடைமுறையில் இருந்தால் மக்கள் இன்று அதன் நன்மையை பெற்றிருப்பர் என மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். 63.19 டொலராக இருந்த மசகு எண்ணெய் கொவிட்…

Read More

சஜித்துக்கு முட்டுக்கட்டையாகும் ஜே.ஆரின் மேட்டுக்குடி வாதம்..?

-சுஐப் எம். காசிம்- நாட்டில், அரைநூற்றாண்டு அனுபவம் உள்ள ஐக்கிய தேசிய கட்சி, பாராளுமன்றத்தில் இல்லாத குறையை ரணிலின் வருகை போக்கவுள்ளது. நாட்டின் முதற் பிரதமர் உட்பட பல பிரதமர்களையும், இரண்டு ஜனாதிபதிகளையும் ஆட்சியில் அமர்த்திய கட்சி இது. இன்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஆசனமும் இல்லாமல், தேசியப்பட்டியலில் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை வைத்துக்கொண்டு, ஆயுளை விடுமளவுக்கு வீழ்ந்து கிடக்கிறது. கடந்த வருடம் ஓகஸ்ட்17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இக்கட்சிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு, ரணிலை ஒதுங்கிவிடுமாறு…

Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார்..!

நூருல் ஹுதா உமர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி பாலசிரிசேன, மொறகஹகந்த நீர்த்தேக்க திட்டம், ஆசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைத்திட்டம் ஆகிய இரு அபிவிருத்தி திட்டங்கள் மூலமாகவும் அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமை, ரணிலை பிரதமர் கதிரையிலிருந்து அகற்றியமை, மத்தியவங்கி ஊழல் ஆணைக்குழுவை அமைத்தமை போன்ற அதிரடி அரசியல் நடவடிக்கைகள் மூலமாக அரசியல் அரங்கில் அழியாத தடம் பதித்தவர் என கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பில் இன்று (12) அவர்…

Read More

சம்மாந்துறையில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்..!

(செ.தேன்மொழி) அம்பாறை – சம்மாந்துறை பகுதியின் வளத்தாபிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான வடித்தலில்போது பீப்பாய் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை, சட்டவிரோதமான மதுபான வடித்தலின்போது, பீப்பாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் காயமடைந்திருந்தார். இதன்போது ஏகாம்பரம் தங்கவேல் எனப்படும் நபர் உயிரிழந்துள்ளதுடன்,…

Read More