அல்லாஹ்தான் எல்லாவற்றினதும் சூத்திரதாரி – மீண்டும் பகிரங்கமாக சொன்னார் ஞானசார தேரர் !

இஸ்லாமியர்களின் இறைவன் அல்லாஹ் மீது அவதூறான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பொதுபலசேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் இணைய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், தனக்கெதிராக பொலிஸ் செல்வோர் உட்பட்ட பலரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,எனக்கெதிராக சி ஐ டி செல்வோர், எனக்கெதிராக விமர்சனங்களை செய்வோர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதை நான் கூறிவைக்க விரும்புகிறேன்.சஹ்ரானின் கொள்கைகளை பின்பற்றுவோர்…

Read More

ஞான‌சார‌ தேர‌ர் கூறியிருப்ப‌து அடிப்ப‌டைகளற்ற‌ முட்டாள்த‌ன‌மான‌ க‌ருத்து : சவால்களை முன்வைத்து விளாசுகிறது ஐக்கிய‌ காங்கிர‌ஸ்..!

மாளிகைக்காடு நிருபர் 2009ம் ஆண்டு நாட்டின் வீர‌த்த‌ள‌ப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ளின் உறுதியான‌ அர‌சிய‌ல் நிலைப்பாடு கார‌ண‌மாக‌ யுத்த‌ம் முடிந்த‌ பின், யுத்த‌த்தின் போது முஸ்லிம்க‌ள் சிங்க‌ள‌ ராணுவ‌த்துட‌ன் நின்ற‌தே தமிழீழ‌ தோல்வி என்ப‌தை புரிந்த‌ வெளிநாட்டு ச‌க்திக‌ள் முஸ்லிம்க‌ளையும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் பிரித்து மோத‌விட்டால் தான் எதிர்கால‌த்தில் த‌ம்மால் மீண்டும் விடுத‌லை போராட்ட‌த்தை கொண்டு செல்ல‌ முடியும் என்ப‌த‌ற்காக‌ விலை கொடுத்து வாங்க‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌வே நாம் ஞான‌சார‌ தேர‌ரை ச‌ந்தேகிக்கிறோம் என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க்…

Read More

இன்டர்ஸ்கூல் – இலங்கையில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் வட்ஸ்அப்குழு குறித்து பொலிஸார் எச்சரிக்கை..!

இலங்கையில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் வட்ஸ்அப் உரையாடல்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள மேல்மாகாண புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐஎஸ்குழுவின் வட்ஸ் அப் உரையாடல்கள் குறித்த எச்சரிக்கையாகயிருக்குமாறு மேல்மாகாணத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியுள்ளதாக மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இன்டர்ஸ்கூல் என்ற வட்ஸ்அப் குழு ஐஎஸ் அமைப்புடன் என தெரிவித்துள்ள அவர் யாரையாவது இணைந்துகொள்ளுமாறு அவர்கள் அழைப்பு விடுத்தால் அதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த வட்ஸ்அப் குழு தொடர்பாக…

Read More

கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் அம்பாறையில் !

நூருல் ஹுதா உமர் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் தலைமையில் இன்று (27) அம்பாறையில் நடைபெற்றது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கிணங்க இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் லோகான் ரத்வத்த, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் டவலியு.டி.வீரசிங்க, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஷ , கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிலான்…

Read More

“பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் – 2022” ஆரம்பம்

நூருல் ஹுதா உமர் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் தேசிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதியின் “பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் – 2022” தொடர்பான முன்மொழிவுகளை தெளிவுபடுத்தி ஆரம்பித்துவைக்கும் விஷேட கூட்டம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஷ்ஷான் அவர்களின் தலைமையில் சனிக் கிழமை பிரதேச…

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இந்தியாவின் ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமமும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சி வகுப்பு!

மாளிகைக்காடு நிருபர் இந்தியாவின் ஈ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் ISTE (Indian Society for Technical Education, New Delhi) ஆதரவுடன் இந்தியாவில் துறை சார்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான ஒரு வாரகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இந்தியாவில் ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் 2 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 16 இயந்திரவியல் மாணவர்கள் ஒன்லைன் (online) மூலம் ஒரு வாரகாலம் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்….

Read More

நாட்டை முதலாம் திகதி திறக்க மாட்டார்கள் – ரணில்..!

தற்போதைய முடக்கல் நிலை ஓக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக சம்மேளன கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.உள்ளுர் சந்தைக்கான டீசலை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒக்டோபர் நடுப்பகுதி வரை முடக்கல் நிலை நீடிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பு குறைவடைந்து வருவதே அதிக கரிசனைக்குரிய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்….

Read More

இனிமேலும் சலுகைகளை வழங்கமுடியாது – விலை அதிகரிப்பு நிச்சயம்..!

அமெரிக்க டொலர்கள் தொடர்பில் நாங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம் என்பதை நாங்கள் மறைக்கவிரும்பவில்லை- அமைச்சர் பந்துல வாழ்க்கை செலவு அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கப்போகின்றது என அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்கான டொலர்களை பெற்றுக்கொள்வதில் வர்த்தகர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள அவர் பால்மா உள்நாட்டு எரிவாயு கோதுமா உட்பட பல பொருட்களின் விலைகள் உள்நாட்டில் அதிகரிக்கவுள்ளன என அவர்…

Read More

ஞானசார தேரருக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்கள் முறைப்பாடு..!

நூருள் ஹுதா உமர். முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ் தலைமையகம்…

Read More

கடன் வசதியை அதிகரிக்குமாறு கோரி, அபுதாபியுடன் கம்மன்பில பேச்சு – ஏற்கனவே ஈரானுடன் கலந்துரையாடல்..!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும் கடன் வசதியை அதிகரிப்பதற்கு உலகளாவிய வர்த்தக நிறுவனத்தின் (அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்) பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்விடயத்தைப் பதிவிட்டுள்ளார்.

Read More

மீண்டும் வெளிநாடு பறக்கத் தயாராகும் பிரதமர் மஹிந்த..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வாரம், மருத்துவ தேவைக்காக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை மீது சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையோ அல்லது வேறு இலங்கைப் பிரஜைகளையோ சிங்கப்பூர் அரசாங்கம் தற்போதைக்கு நாட்டினுள் ஏற்பதாக இல்லை. எனினும் நீண்ட நாட்கள் இலங்கை – சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வெறும் ஐந்து பேருக்கு மாத்திரமே பிரவேசிப்பதற்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியிருப்பதாக…

Read More

அசாத் சாலி விவகாரம்; CIDக்கு நீதிபதி காட்டம்..!

கடந்த மார்ச் மாதம், ஊடக சந்திப்பொன்றில் வைத்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி விவகாரத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் திரிபு படுத்தப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு தவறாக செயற்பட்டிருப்பதாக காட்டம் வெளியிட்டுள்ளர் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் புத்திக சி. ராகல. அத தெரன – ஹிரு போன்ற ஊடகங்களில் வெளியான ‘வெட்டி’ ஒளிபரப்பப்பட்ட காட்சிகளும் அதிலடங்குகின்ற பேச்சுக்களுமே இவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்குகிறதன்றி முழுமையான ஊடக…

Read More

ஹஸீரின் விதைப்பின் அறுவடையை ஹக்கீம் விரைவில் கிழக்கில் பெற்றுக்கொள்வார்; இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அப்னான்…!

முஸ்லிம் காங்கிரஸ் என்பது வடக்கு,கிழக்கு மக்களின் அரசியல் சொத்து. மாமனிதர், பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களால் கிழக்கிலிருந்து கருவுற்று, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்காக வளர்க்கப்பட்ட மக்கள் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். பெருந்தலைவரின் மரணத்திற்கு பின் சின்னாபின்னாமாக்கப்பட்டு, குரங்கின் கையில் கையில் கிடைத்த பூ மாலை போல “டீலர் குடும்பத்தின்” கையில் மாட்டிக் கொண்டுள்ளது மு.கா கட்சி. கிழக்கு மக்களின் வாக்குகளை மூலதனமாகக் கொண்டு இயங்கும் கட்சி முஸ்லிம் காங்கிரஸ். அவ்வாறு கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்…

Read More

விமல் கூட்டணி அடம்; பசில் எதிர்ப்பு, தோல்வியில் முடிந்த சந்திப்பு..!

கெரவலபிட்டிய, யுகதனவி மின் உற்பத்தி மையத்தின் இயற்கை எரிவாயு தயாரிப்பு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கான முடிவை எதிர்த்து வரும் விமல் வீரவன்ச கூட்டணிக்கும் பசில் தரப்புக்குமிடையில் நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது, இதனூடாக 250 மில்லியன் டொலர் வருவாய் கிடைப்பதோடு மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியும் பிறக்கும் என பசில் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். எனினும், விமல் கூட்டணி இதற்கு உடன்படாத நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் மீண்டும்…

Read More

500 மில்லியன் கடனை இந்தியாவிடம் கேட்கும் அரசு..!

பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தேவை நிமித்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கேட்டு அமீரகம், ஈரான் உட்பட பல நாடுகளை நாடிய இலங்கை தற்போது அக்கடனை இந்தியாவிடம் கேட்டுள்ளது. எரிபொருளையாவது கடனுக்குப் பெற்று, தாமதமாக மீளச் செலுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவிக்கிறார். இதேவேளை, மன்னாரில் எண்ணை வளம் இருப்பதாகவும் அதனைத் தோண்டியெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த கடனை அடைக்கப் போவதாகவும் பெற்றோலிய அமைச்சர் கம்மன்பில தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

“பெண்கள் அரங்கத்தினால்  உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு !

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் வழிகாட்டுதலின் கீழ் கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு “பெண்கள் அரங்கத்தினால்” உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா பிரதீபன், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.புண்ணியநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டு உலர் உணவுப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகு மீதேறி போராட்டம் : அமைச்சர் டக்ளஸ் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர கோருகின்றனர்..!

நூருல் ஹுதா உமர் மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரின் செயலை கண்டித்தும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகுகளில் ஏறி வித்தியாசமான போராட்டம் ஒன்றை அட்டாளைச்சேனை கடற்கரையில் இன்று (24) மாலை முன்னெடுத்தனர். பதாதைகளை ஏந்திக்கொண்டு கடற்கரையில் ஊர்வலமாக பவனி வந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போது மீனவ சங்கங்களின் சார்பில் கருத்து தெரிவித்த மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களுக்கும்…

Read More

அசாத் சாலியின் பிணை கோரிக்கை வாபஸ் பெறப்பட்டது..!

( எம்.எப்.எம்.பஸீர்) மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு, அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கை அவர்களால் வாபஸ் பெறப்பட்ட பின்னர் நிராகரிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அசாத் சாலிக்கு பிணைகோரும் மனு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா மன்றில் ஆஜரானார். அவர் பிரதிவாதிக்கு…

Read More

அடுத்தமாதம் முழுமையான அமைச்சரவை மாற்றம்..?

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு சில கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்திருப்பதாக இணையதள செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையான அமைச்சரவை மாற்றமாக இது அமையும் என்றும் கூறப்படுகின்றது. பெரும்பாலும் வரவு செலவுத்திட்டத்திற்குப் பின்னராக அமைச்சரவை மாற்றம் நிகழ்வது வழக்கம். இருப்பினும் இம்முறை அதற்கு முன்னதாகவே அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் விருப்பம்…

Read More

செலுத்துவதற்கு டொலர் இல்லை; 1300 அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் துறைமுகத்தில்..!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1300 அத்தியா வசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்கு மதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்று மாத காலமாக துறைமுகத்தில் குறித்த கொள்கலன்கள் குவிந்திருப்பதாகவும், இவற்றை விடுவிக்க வங்கிகளிலிருந்து டொலர்கள் வெளியிடப் படாமையே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 40 முதல் 50 வரையிலான இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்த பொருட்களை பல மாத காலமாக சேமித்து வைத்திருப்பதாகவும், அவர்கள் வெளியேற்று வதில் தாமதம் ஏற்படுகின்ற காரணத்தால் தாமதத்திற்கான…

Read More

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்க இடமில்லை. மாற்றுக்காணி கோரி மகஜர்..!

வாழைச்சேனைகொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் நில பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை தொடர்பாக கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு இன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவிடம் மகஜரினை செயலகத்தில் வைத்து கையளித்தனர். ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் நில பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக நல்லடக்க பணிகளை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள வேறு இடங்களுக்கு உடனடியாக மாற்றுமாறு கோரிக்கை விடுத்து கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்து…

Read More

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் 4 கட்டங்களின் கீழ் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சின் செயலாளர்..!

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் பயணக் கட்டுப் பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி 1-5 வகுப்புகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

மதுக்கடையைத் திறப்பது தவறில்லை, திறக்கப்பட்டமைக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்- டிலான் பெரேரா..!

மதுக்கடையைத் திறக்க அறிவுறுத்தல் விடுத்தவர்கள் இல்லை யென்றால் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மது அருந்துவதை சட்டத்தால் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மதுபானக் கடைகளைத் திறப்பது குற்றமல்ல என்றும், நாடு முடக் கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணமுள்ளவர்கள் விலை உயர்ந்த மதுபானத்தை அருந்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுக்கடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ​​அதை விரும்புவோர் குடிக்கலாம், விரும்பாததோர் குடிக்காது விடலாம்…

Read More

முதலாம் திகதி நாடு திறக்கப்படுமா..?

கடுமையான பயணக் கட்டுப்பாட்டுக்குள் எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படலாம் என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். நீண்ட நாட்களாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் நல்ல பிரதிபலன் கிடைத்துள்ளமை தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாடு திறக்கப்பட்டாலும் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஊழியர்களை வரவழைப்பதில் 25% வரையறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் பொதுப் போக்குவரத்தின் போது 50% மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் குறித்த…

Read More

ஞானசார சொன்னதெல்லாம் உண்மை: சரத் வீரசேகர..!

ஐ.எஸ் அமைப்பின் சிந்தனை வாதம் இலங்கையில் இருக்கும் வரை எந்நேரமும் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என அண்மையில் ஞானசார தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மையானது எனவும் அதன் பின்னணியில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர. அல்-குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட வஹாபிச கொள்கையாளர்கள் தாம் சொர்க்கம் நுழைவதற்காக தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த தயார் நிலையில் உள்ளவர்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இப்பின்னணியில் ஞானசாரவுக்குத் தாம் நன்றி கூறுவதாகவும் சரத் வீரசேகர தெரிவிக்கின்றமையும் வஹாபிச கொள்கையாளர்களை கைது…

Read More