
இத்தாலி செல்லும் முன்னர் மஹிந்த – கோட்டாபய – பஷில் அவசர சந்திப்பு..!
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று இத்தாலிக்கு செல்ல முன் நேற்று இரவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியுள்ளார் என தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷவும் கலந்து கொண்டிருந்தார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் பங்கேற்கவில்லை. ஜனாதிபதி தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக மேலும் கூறப்படுகிறது.