
சாணக்கியனின் கருத்துக்கு வீரவன்ச கண்டனம்!
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்” என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “சிற்சில அரசியல் முரண்பாடுகளால் ஏற்பட்ட சில சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. அதாவது விடுதலைப்புலிகள் வடக்கில் இராணுவத்தைக் கொல்லும்போது, அதனால் கொதிப்படைந்த தெற்கு மக்கள் குழப்பமடைந்திருக்கலாம். அதேபோல் யாழ். நூலகம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள்…