ஈஸ்டர் தாக்குதல்; காத்தான்குடி சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 60 பேருக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்கண்டவாறு  இன்று (05) உத்தரவிட்டார். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் சஹ்ரானுடன்  தொடர்பிலிருந்த, சஹ்ரானின் பயிற்சி முகாமில் பங்குப் பற்றியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 60இக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

‘அதாவுல்லா சாய்ந்தமருது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக்கூடாது’ – யஹியாகான்!

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து தொடர்ந்தும் அந்த பிரதேச மக்களைத்  ஏமாற்றக் கூடாதென, முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருதிலுள்ள தனது அலுவலகத்தில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் இன்று (5) உரையாற்றும் போதே யஹியாகான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையின் பதவிக்காலம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் 2022 பெப்ரவரியில் சாய்ந்தமருது நகர சபை மலரும்…

Read More

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்; கல்முனையை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை  பள்ளி ஒழுங்கை  வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய  நான்கு பிள்ளைகளின் தந்தையான சாலி முஹமது நளீம் என்ற சந்தேகநபரே நேற்று (04) மாலை  உயிரிந்துள்ளதாக பொலிஸாா் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா். உயிரிழந்துள்ள சந்தேகநபர்  சஹ்ரானுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 2019.05.22 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தங்காலை சிறைச்சாலையில்…

Read More

TikTok சிறுவன் படுகொலை – கைதான 6 பேருக்கு விளக்கமறியல்!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அறுவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா இன்று (05) உத்தரவிட்டார். மேலும் ஆறு சிறுவர்களையும் சிறைச்சாலை பாதுகாப்பில் மாகொல சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் 12 மற்றும் 16 வயதுடையவர்கள் என கிரான்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

“மரணத்தின் பிறகும் அநீதி, ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பார்”

ஈரானின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானி ஈராக் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட பிறகும், அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்க மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான கெவின் பாரெட் கூறுகிறார். “இமாம் ஹுசைன், மால்கம் எக்ஸ் மற்றும் சேகுவேரா போன்ற வரலாற்று நபர்களைப் போலவே, ஜெனரல் காசிம் சுலைமானியும் அவரது மரணத்திற்குப் பிறகும் அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்து ஊக்குவிப்பார்” என்று கெவின் பாரெட்…

Read More

வலுக்கட்டாயமாக டொலர்களை மாற்றும் உத்தரவை மத்திய வங்கி ஆளுநர் மறுப்பு!

இலங்கை மத்திய வங்கியினால் வாடிக்கையாளர்களின் அந்நியச் செலாவணி (Forex) கணக்குகளில் உள்ள டொலர் நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு, ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கணக்குகளில் காணப்படும் டொலர் பெறுமதிகள் இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்றது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை மத்திய வங்கியின் உத்தரவிற்கு அமைய வணிக வங்கிகள் இவ்வாறு தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் காணப்படும்…

Read More

‘அரசு வழங்கிய புத்தாண்டு சலுகைகளால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி; சஜித் அணி அதிர்ச்சி’ – மர்ஜான் பளீல்!

கொரோனா தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நாட்டு மக்களுக்கு சிறந்ததொரு தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் திடீரென அறிவித்துள்ளதை தான் வரவேற்பதோடு இந்த திடீர் அறிவிப்பால் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினர் அதிர்ந்து போயுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ ஆகியோர் ஒன்றிணைந்து புத்தாண்டு…

Read More

திடீரென்ற அதிகரித்த அரிசி விலை; அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

சந்தையில் அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார். வழமையாக ஜனவரி மாதத்தில், குறித்த ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கும். ஆனால், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான…

Read More

(Update) ஒய்வு பெறுகிறாறா பானுக்க ராஜபக்ஷ? ஓய்வினை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் சபை!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பானுக்க ராஜபக்ஷ, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கெட் சபைக்கு  (SLC) கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உடற்தகுதி பரிசோதனைகளின் சிக்கல் தன்மையினை கருத்திற் கொண்டிருக்கும் பானுக்க ராஜபக்ஷ தனது வேண்டுகோள்கள் பூர்த்தி செய்யப்படாதபட்சத்தில் ஓய்வு பெறுவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பப்படுகின்றது. அதன்படி தான் வழங்கியுள்ள கடிதத்தில்…

Read More

மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் நேற்றைய தினம் (04) மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைஇ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார…

Read More

‘வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தினேஷின் கருத்தை ஆதரிக்கிறோம்’

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என, அமைச்ச‌ர் தினேஷ் குண‌வ‌ர்த்த‌ன‌ தெரிவித்த ய‌தார்த்த‌மான‌ க‌ருத்தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ர‌வேற்பதாக, அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்துள்ள‌தாவ‌து, இந்திய பிரதமருக்கு ஆவணம் அனுப்பி வடக்கு,கிழக்கை இணைக்க முடியாது. வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைப்ப‌த‌ற்காக‌ த‌மிழ் இன‌வாத‌ க‌ட்சிக‌ளும் முஸ்லிம் இன‌வாத‌ க‌ட்சியான‌ முஸ்லிம் காங்கிர‌ஸும் இந்திய‌ பிர‌த‌ம‌ர் மோடிக்கு க‌டித‌ம் அனுப்பும் முய‌ற்சியில் ஈடு ப‌ட்டுள்ளன. இந்நேரத்தில் அர‌ச‌ த‌ர‌ப்பு…

Read More

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை   விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (04) நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது. வடக்கு,nகிழக்கில் ”பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம், “ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் முகமாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  வருகை தந்தபோதே,  திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்விலும் கலந்துகொண்டார். இதன் போது  படகு…

Read More

சம்மாந்துறையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

மாணவர்களின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு  உதவுதலை நோக்காக கொண்டு சமூக சேவை பிரிவினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை  பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.முகம்மது ஹனிபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் யு.எம். அஸ்லம்,  கணக்காளர் ஜ.எம்.பாரீஸ், சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனா்.

Read More

ஆறுகளைச் சூழவுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை..!

மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவ்வப்போது திறக்கப்பட வேண்டியுள்ளதால், மகாவலி, கலாஓயா மற்றும் முண்டேனியாறு ஆகிய ஆறுகளின் நீரைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. அம்பாறை ரம்பகென் ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் யான் ஓயா நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் கட்டுப்பாட்டு செயலகப் பணிப்பாளர் டி….

Read More

அரசாங்கத்தை விமர்சித்த நிமல் லன்சா மீது, கை வைக்காதது ஏன்..? மைத்திரிபாலவின் அதிரடிக் கேள்வி..!

அரசாங்கத்தை விமர்சித்த 24 மணித்தியாலங்களில் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமல் லான்சா சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த போதிலும் அவருக்கு “எல்லாம்” தெரியும் என்பதால் யாரும் அவர் மீது கை வைக்கவில்லை என்றார். நேற்று (04) இடம்பெற்ற கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சந்தையில் விமர்சனம் செய்ததற்காக சுசில் நீக்கப்பட்டார். ஆனால், நிமல்…

Read More

அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படவேண்டாம் – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி..!

அரசாங்கத்தை விமர்சிக்கும் போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இராஜாங்க அமைச்சர்களும் அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுசில்பிரேமஜயந்த அரசாங்கத்தை விமர்சித்தமை குறித்து கடும் சீற்றமடைந்திருந்த ஜனாதிபதி அரசாங்கத்திலிருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பது ஒழுக்கமான செயலா என கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அரசாங்கமும் தனது உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணவேண்டும்,பொது அரங்கில் விமர்சிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா..!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராஜித சேனாரத்ன வீட்டுத் தனிமைப்படுத்த லில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ மேற்பார்வையின் கீழ் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக முன்னாள் சுகாதார அமைச்சருடன் நெருக்கமாக இருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் ராஜித சேனாரத்ன நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More