சுசிலின் பதவி நீக்கம் உணர்த்துவது? இலங்கை அரசியலின் அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கும் ‘குத்து வெட்டுகள்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவை, செவ்வாய்க்கிழமை (04/01) பதவி நீக்கினார். சில தினங்களுக்கு முன்னர், சந்தைக்குச் சென்ற சுசில் பிரேமஜயந்த, பொருட்களின் விலை உயர்வு தொடர்பில், ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்திருந்தார். அதைக் காரணம் காட்டியே, அவர் பதவி நீக்கப்பட்டிருக்கிறார். சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் ரவூப் ஹக்கீமும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் அநுர பண்டாரநாயக்கவும் ஜனாதிபதிக்கான…

Read More

சஜித்தின் பிரபஞ்சம் திட்டம்; வவுனியா பாடசாலைக்கு கணினி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு!

நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக, இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் மற்றும் ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தினூடாக, டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (07) வவுனியா, மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், விஷேட அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன…

Read More

சீன உர கம்பனிக்கு 6.9 மில் டொலரை செலுத்தியது மக்கள் வங்கி!

சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 6.9 மில்லியன் டொலர்களை (USD 6,873,975) , மக்கள் வங்கி இன்று (07) செலுத்தி விட்டது என அந்த வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனால் குறித்த உரம் கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மக்கள் வங்கி தெரிவித்துள்ளதாவது, தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக்…

Read More

அமானா வங்கி தொடர்ந்தும் இலாபகரமான செயற்பாடுகளை உறுதி செய்துள்ளது!

அமானா வங்கி தனது இலாபகரமான செயற்பாடுகளை மேலும் உறுதிசெய்யும் வகையில், 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாதகாலப்பகுதியில், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வரிக்கு முந்திய இலாபத்தில் 89% வளர்ச்சியை பதிவுசெய்து ரூ. 736.3 மில்லியனாக பதிவு செய்திருந்தது. 2020 ஆம்ஆண்டின் இதே காலப்பகுதியில் வங்கியின் வரிக்குபிந்திய இலாபம் ரூ. 389.4 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொற்றுப்பரவல் காரணமாக இலங்கை மோசமாக பாதிப்படைந்திருந்த மூன்றாம் காலாண்டு பகுதியில் அமானாவங்கியின் வரிக்குமுந்திய இலாபம் 66%…

Read More

சாய்ந்தமருதில் கடற்கரை பிரதேசமொன்று இல்லாமல் போகும் அபாயம்!

சாய்ந்தமருது கடற்கரையோரப் பிரதேசம் கடலரிப்பினால் பாரிய சேதத்திற்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றும் பாரிய அலையின் வேகத்தினால் கடலோரம் தினசரி பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருவதுடன் , கரைவலை மீனவர்களின் தோணிகளையும், வள்ளங்களையும் பாதுகாப்பாக பேணுவதற்கு வேறு இடமில்லாமல்  மீனவர்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது கூட பாதிக்கப்படாத சாய்ந்தமருது கடலோரப்பிரதேசம் தற்போதுள்ள கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவது பிரதேச மக்களுக்கு பெரும்…

Read More

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று (07) நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் -21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.

Read More

பால்மா தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் – இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு!

சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின்  முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150…

Read More

வவுனியா தேசிய வைத்தியசாலைக்கு அத்தியாவசிய உபகரணங்கள் அன்பளிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 35 ஆவது கட்டமாக, இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் இன்று (07) வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான…

Read More

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் பதிவியேற்பு!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஜே.எம்.ஏ.டக்ளஸ், தனது கடமையை அம்பாறை கச்சேரியில் நேற்று (06) பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ச, மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Read More

இறக்காமத்தில் நடைபெற்ற காணிக் கச்சேரி!

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறக்காமம் – 03, 05, 08 மற்றும் வரிப்பத்தான்சேனை – 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கெனவே காணிக் கச்சேரி நடத்தப்பட்டிருந்தது. எனினும், குறித்த காணிக் கச்சேரிகளுக்கு தகுந்த காரணங்களால் வருகை தராதவர்களுக்கான காணிக் கச்சேரி, பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நசீல் தலைமையில் நேற்று (06) நடைபெற்றது. இக்காணிக் கச்சேரிக்கு பிரதேச செயலகக் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும்…

Read More