பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு..!

(எம்.ஜே.எம்.சஜீத்) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய அரச வானொலி விருது மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இளங்கலைஞர் விருது போன்றவற்றைப் பெற்றுக் கொண்ட ஊடகவியடலாளரும், இலங்கை வானொலி அறிவிப்பாளரும், ஆசிரியருமான எம்.ஏ.றமீஸ் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டியங்கும் ‘பெற்றிறெப்’ நிறுவனத்தின் மூலம் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ஊடகவியலாளரும் ஆசிரியருமான நடனசபேஷன் தலைமையில் களுவாஞ்சிகுடி வரவேற்பு மண்டபத்தில் நேற்று(08) இடம்பெற்ற இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் சமூக சேவையாளருமான கே.துரைநாயகம், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.விமலநாதன்,…

Read More

கோட்டாபயவின் ஆட்சியில் கடனாக பெறப்பட்ட 5,187.5 மில்லியன் டொலர் – அம்பலப்படுத்தினார் சம்பிக்க..!

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைப் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மாத்திரம் 5,187.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இது தொடர்பான பட்டியலொன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தகவலின் பிரகாரம், 2020ம் ஆண்டு 1,875 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும், 2021ம் ஆண்டு 3,312.5 மில்லியன்…

Read More

“மஹிந்தானந்தவிற்கு ஒரு துளியேனும் வெட்கம் இருந்தால், உடனடியாக பதவி விலக வேண்டும்”..!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் இன்றைய (08) தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சீன கழிவுக் கப்பலுக்கு பணம் செலுத்தப்படுமா என நாம் கேட்ட போது இந்த அரசாங்கம் மண்ணைச் சாப்பிட்டுக் கொண்டு ஒரு சதமும் வழங்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியது. மஹிந்தானந்த உள்ளிட்ட ஆளும்…

Read More

கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆலோசனை..!

கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆலோசனை. நான் கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டி தலதாமாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றவேளை நான் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன் அவ்வேளை இளைஞர் ஒருவர் முன்வந்து சேர் நீங்கள் கொவிட்டினால் இரண்டு வருடங்களை…

Read More

என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது; ரிஷாட் பதியுதீன்..!

ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாதமதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘பிரபஞ்சம் செயற்திட்டம் சனிக்கிழமை (08) மதியம் மன்னார் எருக்கலம் பிட்டி மத்திய மகளிர் மகாவித்தியாலயத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. -இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்…

Read More