ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் 02ம் மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (19) உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள்…

Read More

பசிலுக்கு எதிரான திவிநெகும வழக்கின் சாட்சிய விசாரணை நிறைவு..!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள திவிநெகும வழக்கின் சாட்சிய விசாரணையை இன்றுடன் முடிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இன்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் சாட்சிய விசாரணையை இன்றுடன் முடிப்பதற்கும், தீர்ப்பை பெப்ரவரி முதலாம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More

இன்று 45 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்..!

நாட்டில் இன்று (19) பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக 1 மணிநேரம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

முட்டை தாக்குதலுக்கு இலக்கான ஜே.வி.பி ஆர்ப்பாட்டக்காரர்கள்..!

திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்க்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுத்திருந்த எதிர்ப்பு பேரணி மருதானை தொழில்நுட்ப சந்தியில் ஆரம்பித்து கோட்டை வரை பயணித்துள்ளது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த போதே முட்டை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

சீன வெளிநாட்டமைச்சர் வருகை ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள்! உள்நோக்கம் என்ன?

இலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது எவ்விதமான நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றன என்பதை சீன வெளிவிவகார அமைச்சோ அல்லது இலங்கைக்கான சீன தூதரகமே வெளியிடுவதை தவிர்த்து இரகசியம் காத்து வந்தன. பொதுப்படையில் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றமையையும் அரசி, இறப்பர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70ஆண்டுகள் பூர்த்தியையும் முன்னிட்டு ஏற்பாடான நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சீன…

Read More

விழிப்புலனற்றோர் அமைப்பின் கிழக்கு மாகாணக் காரியாலயம் அட்டாளைச்சேனையில் திறந்துவைப்பு!

கிழக்கு மாகாண விழிப்புலனற்றோர் அமைப்பின் மாகாண காரியாலய திறப்பு விழாவும், கௌரவிப்பு வைபவமும் அட்டாளைச்சேனையில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது. விழிப்புலனற்றோர் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஏ.எம். அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம். நளீல், அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைடீன் ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இக்…

Read More

கந்தளாயில் நான்காவது எரிவாயு அடுப்பு வெடிப்பு..!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்காவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இன்று பதிவாகியுள்ளது இச்சம்பவத்தில் எந்த விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர் கந்தளாய் பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஊருக்கொரு ஆட்சி, உள்ளுக்குள் எரிகிறது கட்சிகளின் மனச்சாட்சி..!

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் ஒருவருடங்கள் நீடிக்கப்பட்டுள்ளதை அரசாங்கத்தின் பலவீனமாக அல்லது பயமாகப் பார்ப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இன்றைய நிலைமைகள் சில இவ்வாறு இவர்களை சிந்திக்க வைக்கின்றன. இவ்வாறு ஒருவருடங்கள் நீடிக்கப்பட்டமை இது இரண்டாவது தடவையாகும். 1994 இல் ஒருவருடம் இச்சபைகள் நீடிக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் வசம் அதிக சபைகள் இருந்தால், தேர்தலை நடத்த முடியாத நிலை நிலவினால் அல்லது தவணைக்காலங்களில் மக்கள் பணிகளை முன்னெடுக்க முடியாதிருந்தால் இவ்வாறு சபைகள் நீட்டப்படுவது வழமை. இது மாகாண சபைகளுக்கும் பொருந்தும். எந்த…

Read More

மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்..!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேசிய மின்கட்டமைப்புக்கு 150 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் இயந்திரம் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) மின் உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் தடைப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இன்று இரவு மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல்…

Read More

பாகிஸ்தானில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி!

பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து  குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில்   தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில்  வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும்…

Read More

தனிநபர் கடன் ரூ.8 இலட்சமாக அதிகரிப்பு..!

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். நாடு அனைத்து துறைகளும் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ.17.2 ட்ரில்லியனாக உள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 1970 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க…

Read More

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு..!

பொரளையில் உள்ள ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து மேலும் இரண்டு வாள்கள் மற்றும் கத்தியொன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய – பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவர் குறித்த வைத்தியர் தொடர்பில் தகவல்களை வழங்கியதாக பொலிஸார்…

Read More

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய 2 கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன..!

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதில் இருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதனடிப்படையில் 8 நாட்களுக்கு போதுமான டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read More