அமைச்சர் பந்துல பாகிஸ்தான் பயணம்..!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாகின் அழைப்பின் பேரில் அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். இதன்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் வர்த்தக சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் பிணை கோரப்பட்டால் ஆட்சேபனை தெரிவிக்காமலிருக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானம்..!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் பிணை கோரப்பட்டால் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காதிருக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுதர்ஷன சில்வா இதனைத்…

Read More

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  115 இன் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்றத்தில் இன்று (20) நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கமைய சபாநாயகர் இதன் தவிசாளராக நியமிக்கப்படுவதுடன், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவர், அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா உட்பட மேலும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக்…

Read More

கோட்டாபயவின் அரசியல் அனுபவம் தொடர்பில் விமர்சனம் செய்யும் இராஜாங்க அமைச்சர்..!

எரிவாயு நிறுவனங்களில் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டிய தலைவர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படாமை பிரச்சினைக்குரியது. இது அரச தலைவர் செய்யும் மிகப் பெரிய தவறு என இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் பாரிய சமையல் எரிவாயு பிரச்சினை மற்றும் எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய…

Read More

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட அமெரிக்கர்களான ராஜபக்ஷர்கள் நாட்டை இல்லாமல் ஆக்கியுள்ளனர்..!

அரசாங்கம் மக்களின் பெறுமதியான வளங்களை ஒன்றொன்றாக விற்பனை செய்து வருகிறது. பொருளாதாரத்தின் கெடுதியான கொள்கைகளின் பிரதிபலனை நாடு எதிர்நோக்கி வருகின்றது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் எரிசக்தி துறையில் அரசாங்கம் கை வைத்துள்ளது. அவற்றை விற்பனை செய்து வருகிறது எனவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய வளமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கும் உடன்படிக்கையை திரும்ப பெறுமாறு கோரி கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொண்டு…

Read More

சீன மக்களே சாப்பிடாத அரிசி இலங்கைக்கு..!

சீனாவில் பயிரிடப்படும் நெற்பயிர்களில் இரசாயன உரங்கள் நிறைந்து காணப்படுவதாகவும், இதனையே நாம் இலங்கைக்குள் பெறவுள்ளோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். “சீனாவில் உள்ள மக்கள் குறைந்த இரசாயனங்கள் மூலம் பயிரிடப்பட்ட அரிசியை சாப்பிடுகிறார்கள். இந்த அரிசி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஏனென்றால், சீனாவின் மண் மிகவும் மாசுபட்டது மற்றும் இரசாயனங்கள் நிரம்பியுள்ளது. சீனாவில் உள்ள மக்கள் கூட தங்கள் சொந்த பொருட்களை சாப்பிட…

Read More

ஆசிரியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இல்லை..!

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்த மேலதிக கொடுப்பனவான 5,000 ரூபாவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு 2022 ஜனவரி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கணக்காளர்கள் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேலதிக கொடுப்பனவு, ஆசிரியர் கொடுப்பனவு பட்டியலில் காட்டப்பட்டுள்ள போதிலும், அது கொடுப்பனவுடன்…

Read More

இம்ரான் கானைப் போன்று எமது அரச தலைவர்கள், மன்னிப்புக் கோரினாலே அரைவாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் – திவாரத்தின..!

மொழிப்பிரச்சினைக்கு அரச மட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொன்னம்பலம் காலம் தொட்டு சம்பந்தன் வரையிலான காலத்திலிருந்து வருகின்றது என சிவில் அதிகாரியாகவும் – யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனர்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராகவும், முன்னாள் ஜனாதிபதியின் வடகிழக்கு மீள் புனர்வாழ்வு புனரமைப்பு விசேட செயல் அணியின் செயலாளராக சேவைசெய்த எஸ்.பி .திவாரத்தின தெரிவித்தார்.   ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை மற்றும் முன்னைய அறிக்கைகளை கேட்டறியும்…

Read More

தெஹிவளை தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் விடுதலை: இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு..!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரியான ஜெமீலின் சகோதரர் ஏ.எல். ஹக்கீம் உள்ளிட்ட மூவர் சுமார் இரு வருட தடுப்புக் காவலின் பின்னர் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் உள்ள பீ 10263 எனும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மூவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். 2019 ஏப்ரல்…

Read More

அரசியல்வாதி அல்லாத கோட்டாபய அரச தலைவரானது எப்படி..?

2019ஆம் ஆண்டு அரச தலைவருக்கான தேர்தலின் போது நாடு இருந்த இக்கட்டான நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கடந்த அரச தலைவருக்கான தேர்தலின் போது அரசியல்வாதி அல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து, தற்போது அவர் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த குறை கூறிவருகிறார். இந்த நிலையில், எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்…

Read More

முஸ்லிம் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டிருந்த 6 வகையான இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சு உத்தரவு..!

முஸ்லிம் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டிருந்த 10 வகையான இஸ்லாமிய பாடநூல்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் கீழ் வருமாறு,

Read More

சரத் வீரசேகரவுக்கு கொரோனா – பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.   இதையடுத்து வீரசேகர பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயொன்று காரணமாக பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்ட நிலையிலேயே வீரசேகரவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Read More