இலங்கையின் முதலாவது அரபு மொழிப் பேராசிரியராக கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் அரபு மொழி பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவியுயர்வு அரபு மொழியில் இவர்களுக்குள்ள புலமைத்துவத்துக்குக் கிடைத்த கௌரவமாக கொள்ளப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் எம்.எஸ்.எம். சலீம் மாவடிப்பள்ளி முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதய கமு/ அல் – அஸ்ரப் மஹா வித்தியாலயம்) தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து அங்கேயே ஆரம்பக் கல்வியை நிறைவு…

Read More

பிரியந்த குமார கொலை விவகாரம்; காணொளியை பதிவேற்றிய நபருக்கு நேர்ந்த கதி!

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவை, கொலை செய்யும் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய அட்னன் என்ற நபருக்கு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த சந்தேக நபர், முன்னதாக நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்; சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம்!

பொரளையில் உள்ள ஓல்செயின்ட்ஸ் தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், நீதவான் ​அறையில் வைத்து அவர் ஒன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் ஒன்றை  ​அளித்துள்ளார். இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட வைத்தியரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் கூர்மையாக ஆயுதங்கள், வாள்கள், கத்திகள் என்பன அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்!

நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர் உரிய தரப்பினருடன் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பிரதி பரீட்சை ஆணையாளர் எம் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 255,062 சிங்கள மொழிமூல பரீட்சாத்திகளும், 85,466 தமிழ்…

Read More

மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் – ஷானி அபேசேகர..!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு 2020 ஜூன் 16 ஆம் திகதி தனக்கு அழைப்பு கிடைத்ததாக மனுதாரர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார். அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தான்…

Read More

நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்..!

நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 2022 மார்ச் மாதத்திற்குள் பெரிய அளவிலான கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை தவறினால் இந்நிலை ஏற்படும் என கூறினார். ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என அவர் கூறினார். இருப்பினும் மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தியே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும்…

Read More

ஜனாதிபதியின் அக்கிராசன உரையை கிழித்து தொங்கவிட்ட விஜித்த ஹேரத்!

ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை. திருடி சாப்பிடுவது, கடனுக்கு சாப்பிடுவது மற்றும் விற்று சாப்பிடுவதே அரசாங்கத்தின் கொள்கை. தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து கடனை பெறவில்லை என ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில்…

Read More

கிளிநொச்சி வைத்தியசாலை தீ விபத்து; டக்ளஸ் நேரில் விஜயம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். இன்று காலை (21) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். தொடர்ந்து, கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். கிளிநொச்சி மாவட்ட, பொது வைத்தியசாலையின், காச நோய் ஆய்வுகூடத்தில் நேற்று (20) இரவு திடீரென தீ பரவியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, தீயணைப்பு பிரிவினர்…

Read More

கலை, கலாசர படைப்புகளை பாதுகாக்க காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள்!

கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்புக்காக காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதரின் வழிகாட்டலின்கீழ் பிரதேச கலாசார உத்தியோக்கதர் எம்.ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் கலை வட்டங்களை ஸ்தாபிக்கும் நிகழ்வு இன்று (21) பிரதேசெயலகத்தில் இடம்பெற்றது. அனைத்து கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் கிராம மட்டத்தில் கலைஞர்கள் மற்றும் சமுகத்தை அணிதிரட்டுதல் எனும் குறிக்கோளுடன் தேசிய மரபுரிமை, அரங்கக்கலை மற்றும் கிராமிய கலை மேம்பாட்டு இராஜாங்க…

Read More

பொரளையில் பாரிய தீ பரவல்!

பொரளை – கிதுள்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டது. பொரளை, கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரியவராத நிலையில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

இலங்கை சந்தைகளை ஆக்கிரமித்துள்ள இந்திய அரிசி வகைகள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவின் தமிழக மாநில அரிசி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் இவ்வாறு நாட்டின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது. தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் தமிழக அரிசி வகைகளை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரசாயன உரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் விதித்த தடை காரணமாக இம்முறை…

Read More

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை, சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..!

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று (19) உத்தரவிட்டார்.   பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி மொஹமட் ஹஸ்துனின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மின் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருந்தார். தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதற்கும், முஸ்லிம்…

Read More

முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு தென் கொரியா ஒத்துழைப்பு வழங்கும் – தென் கொரிய சபாநாயகர்..!

வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று, அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக் தெரிவித்துள்ளார். பார்க் பியோங்-சியோக் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க்…

Read More

பிரியந்த குமாரவின் மனைவி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பு – இஸ்லாம் சகிப்புத்தன்மையின் மார்க்கம் என்கிறார் உயர்ஸ்தானிகர்..!

மறைந்த பிரியந்த குமாரவை நினைவுபடுத்தி அனுதாப நிகழ்வொன்று இன்று ( 20 ஜனவரி, 2022 ) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.   சமய மதகுருமார்கள், இலங்கை அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச துறைஅதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்துகொண்டனர். அத்தோடு, மறைந்த பிரியங்க குமாரின் மனைவி திருமதி நிலுஷி திஸாநாயக்க மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.  பௌத்த மற்றும் இஸ்லாமிய மரபுகளின்படி இறந்த ஆத்மா சாந்தியடைய…

Read More

முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்ற முஸ்தீபு!

முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தென்கிழக்கு முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் அலி சப்ரி மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை என்பவற்றுக்கும் அவசர மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக அப்பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப், நேற்று (20) தெரிவிக்கையில்; “கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அண்மித்து…

Read More

நமது நாடு இவ்வாறு தடுமாற காரணம் நாட்டின் பொருளாதர கொள்கைகளே : சோம்பறிகள் போன்று வாழும் பொருளாதார கொள்கைகளே நம்மீது திணிக்கப்பட்டுள்ளது – ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி..!

நூருல் ஹுதா உமர் தடுமலை விட சிறிய வைரஸினால் உருவான கொரோனா இந்த நாட்டினது மட்டுமின்றி உலகினது போக்கிலும் மாற்றத்தை உண்டாக்கி மனித மனங்களிலும் பாரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. அதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் இலங்கையர்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்கான காரணம் வெறுமனே கொரோனாவின் தாக்கம் மட்டுமல்ல. கடந்த காலங்களில் சுதந்திரத்தின் முன்னரும் குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரும் மேற்கொண்ட பொருளாதார கொள்கையின் முறையற்ற தன்மையினால் நாம் இன்று அரசி, பால்மா, சிறுபிள்ளைகளின் உணவுகள், எண்ணெய், பழ…

Read More