தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் முடக்கமா?

நாளுக்கு நாள் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முடக்கம் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், கொவிட் தொற்றாளர்களினால் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாக தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இந்த சுய விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், உற்பத்தி…

Read More

கம்பஹா, கொழும்பு மாவட்டங்கள் கொவிட்-19 தொற்றின் தீவிர வலயங்களாக அடையாளம்..!

அண்மைக்காலமாக கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவலானது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்வு விரைவான பரவலுக்கு வழிவகுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அறிகுறியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அறிகுறியற்ற தொற்றாளர்களின் அதிகரிப்பு வயதான வர்களின் ஆரோக்கியத்துக்கும் ஏனைய நீண்ட கால மற்றும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்தகைய சூழ்நிலையில், பூஸ்டர் டோஸைப் பெறுவது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதால்…

Read More

சாய்ந்தமருதில் 85 வயது மூதாட்டி கொல்லப்பட்டார் : சாய்ந்தமருது பொலிஸார் விசாரணையில் !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் அதிகாலையில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் கொலைச்சம்பவமொன்று இன்று (27) காலை பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இலக்கம் 287, புதுப்பள்ளி வீதி, சாய்ந்தமருது-15 இல் தனியாக வசித்துவரும் சுலைமான் செய்யது புஹாரி எனப்படும் 85 வயதை உடைய ஒரு பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ஆறு ஆண் பிள்ளைகளின் தாயாரான இந்த பெண்மணி குறித்த வீட்டில் நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டுக்குள் நுழைந்த கொலைகாரன் அந்த பெண்ணை தாக்கி கொலைசெய்துவிட்டு அவரிடமிருந்த…

Read More

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் சிந்திக்கின்றது – நிதியமைச்சர்..!

சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச லண்டனின் பினான்சியல்டைம்சிற்கு தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச லண்டனின் பினான்சியல் டைம்சிற்கு தெரிவித்துள்ளார். கடனை மீள செலுத்த முடியாத நிலைமையை தவிர்ப்பதற்காகவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காகவும் அனைத்து சாத்தியப்பாடுகளையும் முயல்கின்றோம் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாங்கள் மீள செலுத்தவேண்டிய சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் உள்ளன. ஆகவே நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை…

Read More