
பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸீத் இராஜினாமா!
பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று (28) இராஜினாமா செய்துள்ளார். அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட இராஜானிமா கடிதத்தை, பொத்துவில் பிரதேச சபையின் பதில் செயலாளர் ரீ.விஜயசேகரனிடம் கையளித்தார். பொத்துவில் பிரதேச சபையின் ஹிதாயா புரம் வட்டாரத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் பதவியை சுய விருப்பத்தின் பேரில் இராஜினா செய்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,…