பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்!

“கோட்டா-ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (19) பிற்பகல் ஆரம்பமான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) எதிர்ப்பு பேரணியை நோக்கி, பொலிசார்  கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். குறித்த  பேரணி கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு பிரவேசிக்கும் போது  இலங்கை வங்கி வீதியில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் கொழும்பு தாமரை தடாகத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்த நடைபயண பேரணி மருதானை ஊடாக, காலி முகத்திடல் போராட்டக்…

Read More

டான் பிரியசாத் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரியசாத் உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (19) கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன், முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

நள்ளிரவுடன் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை பிரிமா நிறுவனம் 40 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அந்த விலை அதிகரிப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், 450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி தின்பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள், இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென அச்சங்கம் அறிவித்துள்ளது.

Read More

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளையுடன் (20) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,  நாடளாவிய ரீதியில்  பாடசாலைகளுக்கு  விடுமுறை வழங்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரணிலின் முடிவு சரியானதே..!

ஆறாவது முறையாக ரணில் விக்கிரமசிங்க, மே 12 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவற்றில், ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்றழைக்கப்பட்ட 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், அவர் மூன்று முறை பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். முதன் முதலாக ரணில், 1993 ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்டதை அடுத்து, அப்போதைய பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், பிரதமராக நியமிக்கப்பட்டார். அதனை அடுத்து, 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்….

Read More

அம்பாறை மாவட்டத்தில் வாழைப்பழங்களின் விலை திடீர் சரிவு!

கடந்த சில நாட்களாக, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில்  உள்ளிட்ட பகுதிகளில் வாழைப்பழங்களின் விலை சடுதியாக  குறைவடைந்துள்ளது. கதலி வாழைப்பழம் ஒரு கிலோகிராம் 150 ரூபாய்க்கும், ஆணை வாழைப்பழம் 120 ரூபாய்க்கும், செவ்வாழை 350 ரூபாய்க்கும், சீனி கதலி 120 ரூபாய்க்கும், கப்பல் அல்லது கோழி சூடன் வாழைப்பழம் 280 ரூபாய்க்கும், மொந்தன் வாழைப்பழம் 140 ரூபாய்க்கும், இதரை வாழைப்பழம் 130 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் கதலி உள்ளிட்ட…

Read More

எம்.பிக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள்? – விடயதான அமைச்சர் காஞ்சன மறுப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசலுக்கு வரிசையில் நிற்காமல், பொலிஸ் போக்குவரத்து எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்புவதற்கு பொலிஸ் மா அதிபர் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். அவ்வாறு வழங்கப்படும் எரிபொருளின் விலை 121 ரூபா விலையில் வழங்கப்படுவதாக, நாரஹேன்பிட்டி எரிபொருள் விநியோக இயந்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரண பொதுமக்களுக்கு அதிக விலைக்கும், எம்.பி.,க்களுக்கு குறைந்த விலைக்கும் எரிபொருள் வழங்கப்படுவதாக இதன் மூலம் சர்ச்சை எழுந்துள்ளது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதுள்ள எரிபொருள் விலைக்கே எரிபொருள் வழங்கப்படுவதாக, மின்சக்தி…

Read More

எம்.பிகளின் வீடுகள் மீதான தாக்குதல்; சுயாதீன விசாரணைக்கு முகங்கொடுக்க தயார்!

எம்.பிகளின் வீடுகள் மீதான தாக்குதலுக்கு ஜே.வி.பிக்கு தொடர்பு இருப்பதாக காண்பிக்க சிலர் முயல்கின்றனர்.எந்த ஒருவிசாரணைக்கும் ஜே.வி.பி தயாராக உள்ளது என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் இணைந்து ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம்.அன்று முதல் எமது கட்சி ஆதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள்.ஆனால் நாம் ஒரு கல்லை கூட அடிப்பதற்காக எடுக்கவில்லை. அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடந்த தாக்குதலினால் தான்…

Read More

எம்.பிக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகம்!

கொழும்பு, நாரஹேன்பிட்டி பொலிஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சிரச தொலைகாட்சி சேவை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள விலை காட்சிப்படுத்தல் திரை குறித்த கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை 121.19 ரூபாவாக பதிவாகியிருந்தது. அதற்கமைய அரசியல்வாதிகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருள் 121.19 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு லீற்றர் 92 ஒக்டென்…

Read More

‘எனது வீடு பற்றியும் எரியும்போது தீயணைப்பு படை கண்டுகொள்ளவில்லை’ – அலி சப்ரி ரஹீம் கவலை!

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் நோக்கமே இருந்தது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். வன்முறையில் எம்.பிக்கள் உட்பட அரசியல் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மே 9 ஆம் திகதி யாரோ செய்த தவறுக்கு யாருக்கோ தண்டனை வழங்கப்பட்டது. 200-300 பேர் எனது வீட்டுக்கு வந்தார்கள். அரசியல்வாதிகளால் கோட்டாகோஹோம் ஆர்ப்பாட்டம் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நாம்…

Read More

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது உயிரிழந்திருந்தார். இதனையடுத்து, அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியது. இந்த நிலையில், அவரது வெற்றிடத்துக்கு  ஜகத் சமரவிக்ரம இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read More

அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில் அதிரடி!

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்தார். இன்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கூறினார். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read More

கோதுமை மாவின் விலை அதிகரித்தது!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிலிருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

தனது அதிகாரங்களை குறைக்க இணங்கினார் கோட்டா! நகர்வுகளை ஆரம்பித்த ரணில்!

புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்த அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினருடன், ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வசம் நிதியமைச்சு இருக்கவேண்டும் என்று பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் 21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில், பிரதமர் ரணில்…

Read More