திருமலை, தம்பலகாமம் பஸ் விபத்தில் 6 பேர் காயம்!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – திருகோணமலை பிரதான வீதி, தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வாகன விபத்தொன்று இன்று (25) இடம் பெற்றுள்ளது.திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் களனியை நோக்கி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானது. சுவாமிமலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்னால் வந்த கனரக வாகனமே மோதியதால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்…

Read More

விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் – மே 31 வரை மட்டுமே விமான எரிபொருள் கையிருப்பில்!

இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னை திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள்…

Read More

ரணில் – கோட்டா கூட்டு தாக்குப் பிடிக்குமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பார்வையில், தமது நலன்களைப் பாதுகாகக்கூடிய மிகவும் பொருத்தமானவரையே அவர், பிரதமராக நியமித்துள்ளார். ஏனெனில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் மேடைகளில் ராஜபக்‌ஷர்களை விமர்சித்தாலும் அவர், ராஜபக்‌ஷர்களுக்கு மிகவும் விசுவாசமானவர். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்து, தமது பாதுகாப்பைப் பற்றி அச்சமடைந்து இருந்தபோது, மறுநாள் அதிகாலை அலரி மாளிகைக்குச் சென்று, அவரது பாதுகாப்பை உறுதி செய்து, ஹெலிகொப்டர் மூலம் அவரை ஹம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைத்தவர் ரணிலாவார். ராஜபக்‌ஷர்கள் உள்ளிட்ட மஹிந்த…

Read More

மே 9 வன்முறை; ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்!

கடந்த மே மாதம் 9ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உண்மையை கண்டறியும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படுவதாக கூறும் பத்து அரசியல் கட்சிகள், இந்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்துள்ளன. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்ற கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான கடிதத்தில், ஆணைக்குழுவின் பணிகளை மூன்று…

Read More

வெள்ள அபாயம்: தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் கணிசமான மழையால் அத்தனகல்லு ஓயா, மஹா ஓயா, களனி கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந் துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக குக்குலே ஆற்று நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புளத்சிங்கள பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தற்போதும் அமுலில் உள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர்…

Read More

நாமல் ராஜபக்ஷ மீதான 70 மில்லியன் ரூபா முறைக்கேடு வழக்கு; சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற தீர்மானம்!

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பான வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர். கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரே இன்று இதனை நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கை செப்டம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட்,…

Read More

ஏறுமுகத்தில் ஏறாவூர்: பெண் ஆளுமைகள் அறைகூவல்!

பெண்களுக்கென தனியானதொரு பொதுச் சந்தை, இலங்கையிலேயே ஏறாவூரில்தான் உள்ளது. அதேபோல, பெண்களுக்கென பிரத்தியேக நூலகமும் ஏறாவூரில்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மட்டும் நின்று விடவில்லை. பெண்களுக்கென தனியாக நடைப் பயிற்சி, உடற்பயிற்சி ஏற்பாடுகளும் ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதென்று ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் கூறுகின்றார். ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் ‘பாத்திமா மகளிர் நூலகம்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான வாசிகசாலைத் திறப்பு விழா ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச்…

Read More

ஈஸ்டர் தாக்குதல்; வர்த்தகர் இப்ராஹிமுக்கு 3 வருடங்களின் பின் பிணை!

தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகள் இருவரின் தந்தையான வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் யூசுப் மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

Read More

கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முற்பதிவு செய்யவும்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே 17 ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது…

Read More

“நிபந்தனைகளுக்கு உட்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் “- ஐக்கிய மக்கள் சக்தி!

நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கத்தில் பங்குகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி இணங்கினால், அரசாங்கத்தில் பங்குகொள்ள நாங்கள் தயார் என்ற தீர்மானத்தை செயற்குழு உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். “எரிவாயு, எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய அத்தியாவசியப் பொருட்களுக்கு உதவுமாறு நட்பு நாடுகளுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இலஞ்சம் மற்றும் ஊழலை குறைக்கவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் சட்டத்தை கொண்டு வருவோம்…

Read More

இலங்கைக்கு நிதி உதவி வழங்க திட்டமில்லை – உலக வங்கி அறிவிப்பு!

இலங்கை உரிய பேரண்ட பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் உலக வங்கி நேற்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைக்கு கடன் பெறுவதற்கான வழியை அல்லது புதிய கடன் உறுதிப்பாடு போன்ற வடிவங்களில் உலக வங்கி இலங்கைக்கு உதவ திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறாகக் கூறியுள்ளன. இலங்கை மக்கள் மீது நாம் அக்கறை…

Read More

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

லிட்ரோ நிறுவனமானது,  சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை  5,000 ரூபாவை விட அதிகரிக்கலாம் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டொலரின் விலை அதிகரிப்பு, உலக சந்தையில் சமையல் எரிவாயு விலையின் அதிகரிப்பு என்பவற்றால் தற்போதைய விலையில், எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய…

Read More

பிரதமர் ரணில் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இதில் கலந்துகொண்டார்.

Read More