‘மக்களாணையை மீண்டும் பெற்று ஸ்திரமான ஆட்சிக்கு வழிகோலுங்கள்’ – ரிஷாட்!

வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்றைய தினம் (02) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நான்கு மாத காலத்துக்கான ஒரு இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்திருக்கின்றார். நீண்ட நாட்களாக வங்குரோத்து நிலையில் இருக்கின்ற நாட்டை கட்டியெழுப்புகின்ற வரவு – செலவுத் திட்டமாக…

Read More

Breaking news: இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது..!

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சற்று  முன்னர் இடம்பெற்றது. இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 120 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது. இதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 43 பேர்…

Read More

பாராளுமன்றத்தில் செங்கோல் வரும்போது எழுந்து நிற்காத தேரர், சீன உளவுக் கப்பல் வரும்போது எழுந்து மரியாதை செய்கிறார்..!

இந்தியா எமக்கு உதவிக் கப்பல்களை அனுப்புவதாகவும், ஆனால் சீனா உளவுக் கப்பலை அனுப்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.   பாராளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இந்த காலகட்டத்திலே எங்களுக்கு உதவிய நாடு, அயல் நாடு இந்தியா மாத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியிலே 4 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. குறைந்த வட்டியில் 800 மில்லியன் உணவுக்காவும், மருந்துக்காகவும்,…

Read More

SLPP தலைவராக மஹிந்த..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று விதிகளை மீறிய காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்கிய பின்னர் அந்த தலைவர் பதவிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் , அதன்…

Read More

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது..!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அத்துடன்  இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க  சர்வதேச நாணய நிதியமானது உதவும் சிறந்த கருவியாகவும், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு தொடர்ந்தும்  உதவ அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Read More

கிழக்கில் அழிவடையும் கண்டல் தாவரங்கள்!

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் இயற்கையாக அமையப் பெற்ற கண்டல் தாவர சாகியம் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை, 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தமான சுனாமி போன்றவற்றினாலும் மனிதர்களின் சுயநலமான பாவனையாலும் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகி வருவது மிகவும் வருந்தத்தக்கதாகும். உலர்நீரிலும் நன்னீரிலும் வளரக்கூடிய கண்டல் தாவரங்கள் ஏனைய தாவரங்களை விட வித்தியாசமானவை. சொனரேசியா ,புறூகைரா, அவிசீனியா, றைசோபோரா போன்ற தாவரங்கள்…

Read More

கொழும்பை அச்சுறுத்தும் முதலைகள்!

கொழும்பு மட்டக்குளி களப்பு பகுதியில் இன்று முற்பகல் முதலை ஒன்று சுற்றித்திரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை இதற்கு முன்னர் வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சமூகத் தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்து வரும் நஜீப் பின் அமீர் ஆலிம்!

தர்கா நகர் அறிஞர்கள், மகான்கள், கொடை வள்ளல்கள் தோன்றி பிரகாசித்த பிரதேசமாகும். ‘இங்கும் அண்டிய ஊர்களிலும் காலத்துக்குக் காலம் கொடை வள்ளல்கள் வாழ்ந்து சமூகத்துக்கும் நாட்டிற்கும் நற்பணிகள் ஆற்றிய வரலாறு இப்பிரதேசத்திற்குண்டு. குறிப்பாக 1950களில் ‘ரப்பர் கிங்’ என்று போற்றப்படும் ஈ.எல். இப்ராஹிம் ஹாஜியார், 1960-–70களில் நளீம் ஹாஜியார், 1990- – 2000 ஆண்டுகளில் ஸெம் ரிபாய் ஹாஜியார் உள்ளிட்ட கொடையாளிகளால் கடல் கடந்த நாடுகளிலும் இப்பிரதேசம் புகழ் பெற்று விளங்கியதை நாம் அறிவோம். இவர்களின் அடிச்சுவட்டில்…

Read More

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் அதிக பணியாளர்கள் – விளக்கம் கோரும் அனுர!

அரச சேவையில் பணி செய்யமுடியாதவர்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது ஊடகப்பிரிவுக்கு பாரிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அரச சேவையில் அதிகளவானோர் இருப்பதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலேயே இந்த ஆட்சேர்ப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையாளர்களை வீடுகளுக்கு செல்லக்கோரும், அரச சேவையாளர்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது…

Read More

புத்தளத்தில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!

புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. 24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஒரு ஆண் குழந்தையும் மற்றும் மூன்று பெண் குழந்தைகளுமே பிறந்துள்ளன. தற்போது, ​​குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சுரின் ஜெயவர்தன அவர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

புத்தளம் வெட்டாளை அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் பொன் விழா!

இயற்கையின் அருட்கொடைகளான குறிஞ்சி, முள்ளை, மருதம், பாலை, நெய்தல் என ஐம்பெரும் வழங்களையும் ஒருங்கே பெற்ற புத்தளம் நகரத்தின் வடமேற்கே அழகிய கலப்புக்கும், உப்பு வயலுக்கும் நடுவே அமையப்பெற்றதே எமது கலாசாலையாகும். பொருளாதாரம், கல்வி, கலை கலாசாரம் என அனைத்திலுமே பின்தங்கிக் காணப்பட்ட இப்பிரதேசத்தின் வளர்ச்சியானது தனியான பாடசாலையொன்று தோற்றம் பெறுவதினால் மாத்திரமே சாத்தியமாக்கலாம் என்று உதித்த சிந்தனையின் அடிப்படையில் சில உலமாக்களும், ஆசான்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அஸன் குத்தூஸின் மகனான மர்ஹும் ஏ.ஏ. லத்தீபிடம்…

Read More

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு  பயணங்களை மேற்கொள்ள முடியும் என  உயர் நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.

Read More

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 6ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானம்..!

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (09) கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் திகதிகளில் ‘இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த…

Read More

நாளை 18 மணி நேர நீர் வெட்டு!

நாளை (03) மு.ப. 8.00 மணி முதல் ஞாயிறு (04) அதிகாலை 2.00 மணி வரை கொழும்பு நகரம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அந்த வகையில், கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள், இரத்மலானை, கட்டுபெத்த பிரதேசங்களுக்கு குறித்த காலப்…

Read More

அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்கான சிறப்புக் குழு நியமிக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க!

நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு அபிவிருத்தித் திட்டங்களை இற்றை வரை மேம்படுத்துவதே நோக்கமாகும் என்று விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் உடனடியாக மீளாய்வு செய்யப்படும். தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை இற்றை வரை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதற்காக…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018 இல் நடத்தப்பட்டு 2022 இல் முடிவடையத் திட்டமிடப்பட்டது, ஆனால் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் அவை 2023 வரை நீட்டிக்கப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர்…

Read More

வாக்கெடுப்பில் இருந்து விலகுவதாக ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு..!

எதிர்க்கட்சியில் இணைந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த தான் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read More

பாராட்டுக்குரிய பைசால் காசிமின் பாராளுமன்ற பேச்சு!

பாராளுமன்றத்தில் பா.உறுப்பினர் பைசால் காசிம் பேசுவது மிக அரிது. அவர் சாதாரணமாக பேசும் போதே, சில தடுமாற்றங்களை அவதானிக்க முடியும். இன்றைய அவரது பாராளுமன்ற உரை மிக நேர்த்தியாக இருந்தது. நிந்தவூரானது கடலரிப்பால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாக்க ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் பணம் உடனடியாக எவ்வாறு கிடைத்தது என்பதை அவர் தெளிவாக விளக்கியிருந்தார். அது வேறு வழியில் கிடைக்க சாத்தியமா என்பது சந்தேகமே! இந்த கடலரிப்பு பிரச்சினை பற்றி அரசியல் வாதிகள் பலரும்…

Read More

நீங்கள் சர்வதேசத்துக்கு வழங்கும் செய்தி, இதுவா என்று ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றேன்..?

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.   இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று -01- அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஜனாதிபதி எதிர்பார்க்கும் நாட்டின் சட்டம் – ஒழுங்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பெரிய சவாலாக அமையும். இதனை அவர்…

Read More

எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும் – லிட்ரோ..!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More

வாக்கெடுப்பிலிருந்து விலக ஐக்க மக்கள் சக்தி தீர்மானம்..!

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிஸ் தெரிவித்துள்ளார்

Read More