எகிப்தில் நடைபெறும் காலநிலை மாநாட்டில் நஸீர் அஹமட் பங்கேற்க தீர்மானம்!

எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாட்டில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பங்கேற்கவுள்ளார். உலகின் பல தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சுற்றாடலுடன் தொடர்புடைய புத்திஜீவிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன. கொழும்பிலுள்ள எகிப்திய தூதுவர் மேஜ்ட்மொஷ்லி இதற்கான அழைப்பிதழை கடந்த சனிக்கிழமை அமைச்சரிடம் கையளித்தார். தூதுவரின் தனியார் வாசஸ்தலத்தில் நடந்த இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள்குறித்து இவ்விருவரும் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr அனில் ஜெயசிங்க, ஐநா நிரந்தர வதிவிட பிரதிநிதி…

Read More

சஹ்ரானின் சாரதி உட்பட 4 பேர் பிணையில் விடுவிப்பு!

  மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் பயங்கரவாத தடைச் சட்த்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சாரதி உட்பட 4 பேரை இன்று  (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா தலா ஒருவருக்கு 35 ஆயிரம் ரூபா பணமும் 10 இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவு சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நிபந்தனையுடன் பிணையில் விடுவித்துள்ளார். கடந்த 2018-11-29 திகதி வவுணதீவு…

Read More

சவூதி தேசிய தின நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்டுள்ள கருத்து!

சவூதி தேசிய தின நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில், அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில்  செய்யப்பட்டு வரும் விமர்சனங்களை தாம் கருத்திற்கொள்ளப் போவதில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத் அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எவர் வேண்டுமானாலும் விமர்சனங்களை செய்ய முடியும் எனவும், அதனை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு விசேட அதிதியாக அவர் குறித்த நிகழ்வில் பங்கேற்றதாக…

Read More

கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் விவகாரம் – உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, உயர்நீதிமன்ற வளாகம், பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசங்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி ஒன்று…

Read More

‘அரச இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த முடியாது’ – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

அரச இரகசியச் சட்டத்தின் கீழ், உயர் பாதுகாப்பு வலயங்களை நியமித்ததாக வெளியிடப்பட்ட கருத்து அடிப்படையற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் செயலாகும் என HRCSL விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

‘பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும்’ – ஜீவன் தொண்டமான்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (26) கையெழுத்து…

Read More

“முல்லைத்தீவு – குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல” – கொழும்பில் தேரர்கள் ஆர்ப்பாட்டம்!

“முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (26) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தான் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பௌத்தர்கள் மற்றும் பிக்குமார் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோட்டாவின் மனைவியை மிரட்டி கப்பம் கோரிய நபர் கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியான அயோமா ராஜபக்ஷவிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், திருமதி  அயோமா ராஜபக்ஷவுக்கு 30 முறை தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, அவரிடம் 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், தவறுதலாக குறித்த அழைப்பு…

Read More

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை – பாதுகாப்பு அமைச்சு!

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும் போராட்டம் நடப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக பொலிஸாரிடம் போராட்டத்திற்கான அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பொதுமக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளின் இயக்கம் முற்றிலும் சட்டவிரோதமானது” – மஹிந்த தேசப்பிரிய!

பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது முழுவதும் சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும். உள்ளூராட்சி மன்றங்கள், தேர்தல் இன்றி ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களினால் செயற்படுத்தப்படுவது, பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் கடந்த…

Read More

தாமரை கோபுர நிர்மாணிப்பிற்காக இலங்கை பெற்ற கடனை தீர்க்க நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட வேண்டும்!

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க, கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அவர்களின் நிலுவை தொகையை தீர்த்துவைக்க…

Read More

ஜப்பான், பிலிப்பைன்ஸ் நோக்கி பயணமானார் ரணில் – பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நோக்கி இன்று (26) அதிகாலை புறப்பட்டார். ஜனாதிபதி வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் அவரது அமைச்சுகள் தொடர்பில பணியாற்றுவதற்காக, அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். குறித்த அமைச்சுகளின்  இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக  இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி  பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க,…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணிலை நீக்கியது உயர்நீதிமன்றம்!

ஈஸ்டர் குண்டுதா  தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதில்லை என உயர் நீதிமன்றம் இன்று…

Read More

“இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டப்படி மாற வேண்டும்’ – ஆஸ்திரேலிய வாழ் சிங்கள மக்களிடம் மனோ எடுத்துரைப்பு!

சிங்கள பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து, இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டப்படி மாற வேண்டும். இங்கே ஆஸ்திரலிய பன்மைத்துவ சூழலில் சந்தோஷமாக வாழும் நீங்கள், உங்களது தாய்நாடு மாத்திரம், ஒரு மதம், ஒரு இனம் என்ற ஏகபோக சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என ஆஸ்திரலிய மெல்போர்ன் நகரில் சிங்கள மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார். தமது ஆஸ்திரேலய பயணத்தின்…

Read More

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அதிருப்தி!

கடந்த வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார். அதன்படி, மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்படாவிட்டால், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் எந்தவொரு நபரும் வீதி, மைதானம், கரை அல்லது திறந்த வெளியில் பொதுக் கூட்டம் அல்லது ஊர்வலத்தை நடத்தவோ அல்லது நடத்தவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக…

Read More

கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் – இன்று முக்கிய சந்திப்பு!

கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (26) கூடவுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் உட்பட பல தரப்புகள் ஏற்கனவே இது தொடர்பில், அதன் சட்டப்பூர்வமான தன்மை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார். அதன்படி, குறித்த பகுதிகளில் மேல்மாகாணத்துக்குப்…

Read More