உள்நாட்டு வருவாய் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பம்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. இந்த மனுக்கள் புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் தொடக்கத்தில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்பித்தனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம்,…

Read More

பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா?

எரிபொருள் கட்டணம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும் பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளமுடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்லுமாறு சுகாதார அமைச்சு கட்டுபாட்டினை விதித்து வழிகாட்டல் கோவையையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் பயணிகளுக்கான பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது. எனினும் குறித்த விதிமுறைகள் நீக்கப்பட்டால் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில…

Read More

“டயனா கமகே வெளிநாட்டவர்” – கம்மன்பில!

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் அவர் வெளிநாட்டவர் என்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதை காட்டிலும் வெளிநாட்டவர் இருப்பது மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

நாடளாவிய ரீதியில் இராணுவ நடவடிக்கை!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய, நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுமார் ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் ஒரு வாரத்திற்குள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய, கஞ்சா, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, சிகரெட், கசிப்பு, கோடா உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், கிட்டத்தட்ட…

Read More

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறைப்பு!

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படும் என குறித்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது. அந்த வகையில், 450 கிராம் பாண் (ஒரு இறாத்தல்) மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

ப(B)சூர்கான் Jp அவர்களுக்கு வாழ் நாள் சமூக சேவைக்கான விருது!

அக்கறைப்பற்றில் அண்மையில் நடந்து முடிந்த Zaithoon Nhar foundation விருது வழங்கும் நிகழ்வில், வாழ் நாள் சமூக சேவையாளருக்கான விருதுகளில் ஒன்று பொத்துவிலைச் சேர்ந்த பிரபல சமூகசேவகர் பி.ப(B)சூர்கான் Jp அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. கனடாவில் வசித்து உலகலாவில் Zaithoon Nhar Foundation ஐ இயக்கி வரும் அதன் ஸ்தாபகர் ஸைத்தூன் மற்றும் அதன் செயலாளர் சகோதரி ஆசிகா ஆகியோரினால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது. தனது அமைப்பினாலும் மேலும், இன்னும் பல அமைப்புகளினாலும் பல்வேறுபட்ட சமூக சேவைகளை…

Read More

எரிபொருள் விலைச்சூத்திரம் இன்று?

ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

21 வது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுல்!

பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச் சட்டமூலம், 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது….

Read More

ரணிலை புகழ்ந்த மைத்திரி!

கடந்த காலத்தில் நாட்டில் காணப்படட சூழ்நிலையில், இருந்து நாட்டை ஒரளவு மட்டத்திற்கு கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதிக்கு நாட்டுக்குள் அமைதியான நிலைமையை ஏற்படுத்த முடிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற அந்த கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணி ஆகியவற்றுக்கான புதிய அதிகாரிகளை நியமிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி வேலைகளை செய்யும்…

Read More

இஸ்லாம் பாடப் புத்தக விவகாரம் – நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் முஸ்லிம் எம்.பிக்களுடன் சந்திப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகம் மீள் விநிேயாகம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முகமாக நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில் தலைமையிலான குழுவினர், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் ஆகியோரை நேற்று (30) கல்முனை மாநகர முதல்வர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம்…

Read More

அட்டாளைச்சேனையில் கலை இலக்கிய விழா!

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலை இலக்கிய விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் (27) வியாழக்கிழமை நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு, பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.சி அஹமது சாஹிர், அதிதியாக பாவேந்தல் பாலமுனை பாறூக், விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரின்சான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கலாசார உத்தியோகத்தர்களான எம்.எஸ். ராஜாயா, வி. பத்மராசா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,…

Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் – இன்று இறுதி தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,…

Read More

கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் தலைவராக சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன்!

சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் (CDMF) தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெஹிவலை பெரிய பள்ளிவாயலில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு நகரக் கிளையின் மேற்பார்வையில் இடம்பெற்ற நிர்வாகத் தெரிவிலேயே (30) சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு என்பது, கொழும்பு நகரில் உள்ள 180 பள்ளிவாயல்களை உள்ளடக்கிய மத்திய அமைப்பாகும். இது 12 மண்டல கூட்டமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட்டு…

Read More

ஏதிலிச் சமூகமாக கட்டமைந்த கதை! -சுஐப் எம்.காசிம்-

பிறப்பிடத்தால் வலிகளைச் சுமந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? கரடு முரடான பாதைகளில் கட்டி எழுப்பும் தேவைகளுக்குள் உள்ளது வடபுல முஸ்லிம்களின் எதிர்காலம். பலவந்த வெளியேற்றத்தால் ஏதிலிச் சமூகமாகக் கட்டமைந்த இந்த முஸ்லிம்கள் எந்தத் தேசியங்களுக்குள் உள்வாங்கப்படுவரோ தெரியாது. தமிழ் மொழி பேசுவோர் தமிழ் தேசியத்தாலும், சிங்களம் பேசுவோர் சிங்கள தேசியத்தாலும் பாதுகாக்கப்பட்ட சூழலில்தான், 1990 ஒக்டோபர் 30 இல் வடக்கிலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரே மொழியைப் பேசினாலும், தமிழ் தேசியம் இவர்களை…

Read More

“அமைச்சரவையை நியமிக்காவிட்டால் பட்ஜெட் தோற்கடிக்கப்படும்” – மொட்டு அணி ரணிலுக்கு எச்சரிக்கை!

உடனடியாக அமைச்சரவையை நியமிக்காவிட்டால், வரவு செலவுத்திட்டம் தோல்வியடைய கூடும் என பொதுஜன பெரமுனவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, தேவையானால், வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்குமாறும், தனக்கு அவசியமான நேரத்திலேயே அமைச்சரவை நியமிக்கப்படும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க இந்த குழுவினர் செயற்பட்ட விதத்தை தாம் பார்த்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, இவ்வாறு செயற்பட முடியாது எனவும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

துருக்கியின் 99வது தேசிய குடியரசு தினம்!

துருக்கி நாட்டின் 99வது தேசிய குடியரசு தினம் 28.10.2022 காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுகள் துருக்கியத் துாதுவர்  ஆர்.டிமிட் சேக்குருசி குழு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைசச்சா் சுசில் பிரேமஜயந்த, சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு, இலங்கை -துருக்கி நட்புரவுகள், துருக்கி நாடு இலங்கையின் அனர்த்தங்களின் போது உதவிய திட்டங்கள் மற்றும் துருக்கி இலங்கை நாடுகளுக்கிடையே கல்வி அபிவிருத்திகள் பற்றியும் உரையாற்றினார்கள். இந் நிகழ்வின்போது துருக்கி நாட்டின்…

Read More

பணத்தை அச்சடித்து குவிக்கும் மத்திய வங்கி!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளைச் சீனியின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளது. இதேவேளை கோதுமை மா ஒரு கிலோகிராமின் மொத்த விற்பனை…

Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – உறுதி செய்யப்பட்டது மரண தண்டனை!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக முதலாம் ஆண்டில் கல்வி கற்ற செல்வநாயகம் வரப்பிரகாஷ் அந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி உயிரிழந்தார். சாட்சியங்களின்படி பிரதான குற்றம்…

Read More

விஷம் வைத்து 35 உயிர்களை கொன்ற சம்பவம்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதயில் தனது வயல் காணிக்குள் புகுந்த கோழிகளுக்கு விசம் வைத்த நிலையில், 35 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றிற்குள் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று கோழி உரிமையாளர்களின் 35 கோழிகள் உட்புகுந்த நிலையில் கோழிகளுக்கு சோற்றில் விசம் வைத்து அவை இறந்துள்ளதாக குறித்த கோழிகளின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஆணைக்கோட்டை வயல் நிலப்பகுதியில்…

Read More

கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி உத்தரவு!

வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அந்த பணத்தின் மூலம் நாட்டில் பல தேவையற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவை உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடந்துள்ள ஒரே பலன் கட்டுமான ஒப்பந்தகாரர்களை வளப்படுத்துவது மட்டுமே எனவும் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில்…

Read More

புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது மறக்க முடியாத சம்பவமாகும்!

யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 32 ஆண்டுகளாகின்றன. 32 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான…

Read More

அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர்,மின் கட்டணங்களுக்கான சேவைக்கட்டணம் அதிகரிப்பு!

அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின் கட்டணங்களுக்காக அஞ்சல் திணைக்களத்தால் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புக்கான சுற்று நிருபம் அனைத்து அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். முன்னதாக மின் மற்றும் நீர் கட்டணங்களுக்காக ஐந்து ரூபாய் மாத்திரமே அறவிடப்பட்ட நிலையில் தற்பொழுது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 20 ரூபாய் அறவிடப்படுகின்றது. இலங்கை மின்சார சபையினால் இதுவரை அஞ்சல் திணைக்களத்திற்கு நூற்று…

Read More

பாணுக்கும் விலைச்சூத்திரம் அறிமுகம்!

வர்த்தகர்கள் தன்னிச்சையாக பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உலக சந்தையில் நிலவும் கோதுமையின் விலை, தேசிய சந்தையில் நிலவும் கோதுமையின் விலை மற்றும் உற்பத்தி செலவீனம் ஆகியனவற்றை கருத்தில் கொண்டு விலை சூத்திரத்தை உருவாக்குமாறு அந்த சங்கம் கோரியுள்ளது. இந்த நிலையில், நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கையானது, காலத்திற்கு ஏற்ற கோரிக்கை என நுகர்வோர் சேவை அதிகார…

Read More