‘சமுர்த்தி வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு பெருமிதமடைகிறேன்’ – அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்!

சமுர்த்தி திட்டத்தின் வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு மாவட்ட பணிப்பாளர் என்ற வகையில் பெருமிதமடைகிறேன் என அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தின் இஸ்லாமாபாத் பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஏற்பாட்டில் “புன்னகை கானும் எமது உலகம்” எனும் தொனிப் பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள் இஸ்லாமாபாத் சிறுவர் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கல்முனைக்குடி…

Read More

பௌர்ணமி தினமான இன்று இருளில் மூழ்கும் விகாரைகள்!

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (9) பௌர்ணமி தினத்தன்று விகாரைகளின் மின்விளக்குகளை அணைத்து இருளில் வைப்பதற்கு பௌத்த பிக்குகள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், குறித்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக, தேவாலயங்களிலும் மின்விளக்குகளை அணைத்து ஆதரவளிப்பதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளாத தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி இன்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விகாரைகளின் விளக்குகள் அணைக்கப்படும் போது தேவாலயங்களும் இருளில் மூழ்கும் என…

Read More

“நபிகளாரின் போதனையைப் பின்பற்றி புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்குச் செய்யும் கௌரவம்” – ரணில்!

நபிகளாரின் போதனையைப் பின்பற்றி அனைவரும் புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்குச் செய்யும் கௌரவமாகுமென, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள மீலாதுந் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கை மற்றும் உலக முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினம் இன்று (09) கொண்டாடப்படுகின்றது. உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய அவரது உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என்று நான் நம்புகிறேன். உயர்ந்த…

Read More

“ஜெனிவாவில் ஏற்பட்டது தோல்வி மட்டுமல்ல, அவமானத்துக்கும் உரியது” – ரவூப் ஹக்கீம்!

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும் இம்முறை நடுநிலை வகித்திருக்கின்றமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டுக்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல அவமானத்துக்கும் உரியது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இதற்கு முன்னர் எமது நாட்டுக்கு எதிராகத்…

Read More

மாநபியின் மானிட நேசமும் பன்முகத்துவ பக்குவமும்! -சுஐப் எம். காசிம்-

அமைதிக்காக வழிகோல வந்ததே மதங்கள். மனிதன் இதில் மனநிலை தேற வேண்டும். ஒரு விடயத்தை அல்லது கோட்பாட்டைச் சொல்ல விழைந்திருப்பது எதற்காக? என்ற ஆராய்ச்சிகள் வரவேற்கக்கூடியதாக இருப்பதுதான் சமூகத்துக்கு ஆரோக்கியம். இந்த ஆராய்ச்சிகள் அல்லது கருத்தபிப்பிராயங்கள் சமூகத்தின் அல்லது மதத்தின் இருப்புக்கே ஆபத்தாகிவிடக் கூடாது. இன்றைய அறிவியல் உலகில் ஆராய்ச்சிகள், கருத்தபிப்பிராயங்களை தவிர்க்க முடியாதுள்ளது. எனினும், மதத்தின் போதனைகளை அறிவுக்குட்படுத்தாது அப்படியே அடியொழுகுவதுதான் நம்பிக்கை (ஈமான்) என்ற பொருள்கோடல்தான், இவ்வாறான ஆராய்ச்சிகளை அவசியமற்றதாக்குகிறதோ தெரியாது. எனினும், இறைதூதரின்…

Read More