22 ஆம் திருத்தத்துக்கு பிரதான எதிர்க்கட்சி நிபந்தனைகளுடன் ஆதரவு – மனோ!

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் மனோ கணேசன் எம்.பி கூறினார். இதுபற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மேலும் கூறியதாவது, “இரட்டை குடியுரிமை கொண்டோர் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது. சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை பெசில் ராஜபக்சவின் எண்ணப்படி…

Read More

பாண் விலை குறையாது!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். நாட்டிலுள்ள பேக்கரிகளுக்கான 50% கோதுமை மா விநியோகத்தை இரண்டு பிரதான நிறுவனங்கள் செய்வதாகவும், அவர்கள் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே பாண் விலை குறையும் என்றார். குறித்த இரு நிறுவனங்களும் 280 முதல் 310…

Read More

மஹிந்த – சீனத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர். கலந்துரையாடலின் போது, சீனாவின் சோஷலிசக் கட்டமைப்பில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்வரும் 20ஆவது தேசிய மாநாட்டுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் வாழ்த்துக் கடிதத்தை கையளித்தார்.

Read More

“நான் கூறியபடி செயற்பட்டிருந்தால் தற்போதும் கோட்டாவே ஜனாதிபதி” – பொன்சேகா!

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவரான கெப்டன் சேனக சில்வா ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். டயான கமகேவின் கணவரான கெப்டன் சேனக சில்வா ஊடாக, இந்த…

Read More

“சித்தப்பா கோட்டவுடன் நாட்டை முன்னேற்ற முடியாத நாமல் தேசிய பேரவையில்” – முஜிபுர் ரஹ்மான்!

சித்தப்பா கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற முடியாது போன நாமல் ராஜபக்ச, தேசிய பேரவையில் திட்டங்களை உருவாக்க நியமித்திருப்பது நாட்டுக்கு நகைச்சுவை வழங்கும் விடயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தேசிய பேரவை தொடர்பில் விமர்சன ரீதியான கொள்கை ஐக்கிய மக்கள் சக்தி இருக்கின்றது. அரசாங்கம் குறிப்பிட்ட காலத்திற்கு பொது இணக்கத்தை முன்வைத்தால், அப்படியான வேலைத்திட்டத்திற்கு பதவிகளை பெறாது ஒத்துழைப்பை…

Read More

“அக்கிரமத்தை மூடி மறைத்து மிகப்பெரிய ஈனச் செயலை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது”

வஞ்சகமாக அக்கிரமத்தை மூடி மறைத்து மிகப்பெரிய ஈனச் செயலை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் அருட்பணி க.ஜெகதாசன் அடிகளார் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  மேலும் தெரிவித்ததாவது, “நாங்கள் அறிந்தபடி கடந்த 13 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைத் தேடி அவர்களது உறவுகள் கடந்த ஐந்து ஆண்டுக்கு மேலாக…

Read More

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு!

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 02, 03, 04. 07, 08 09 மற்றும் 10 ஆகிய இடங்களுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் தொழில் வழிகாட்டல் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி நிகழ்வு வியாழக்கிழமை (13) கலை கலாசார பீடத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு உலக வங்கியின் நிதித் திட்டத்தின் கீழ் கலை கலாசார பீடத்தில் செயற்படுத்தப்படும் AHEAD செயற்றிட்டத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தொழில் வழிகாட்டல் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்மி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கௌரவ…

Read More

வரக்காபொலையில் காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்பு!

வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்த  நிலையில் அதில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில், தாய் மற்றும் அவரது மகனுடைய சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றுமொரு மகன் உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read More

“உலமாக்கள் ஒவ்வொருவரும் பட்டதாரியாக வரவேண்டும்!”

சம்மாந்துறை அன்வர் பள்ளிவாசலில் அமைந்துள்ள ஜம்இய்யதுல் உலமா அலுவலகத்துக்கான மின்பிறப்பாக்கி (Generator), சமூக செயற்பாட்டளர், விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டின் பிரகாரம், OCD அமைப்பினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தடை காரணமாக, ஜம்இய்யதுல் உலமா சபையினர் OCD அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, அசௌகரியங்களை நிவர்த்திக்கும் முகமாக மின்பிறப்பாக்கி வழங்கிவைக்கப்பட்டது. இதனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் எம்.வை. ஜலீல் மௌலவியிடம், கடந்த சனியன்று, ஜம்இய்யதுல் உலமா கட்டிட தொகுதியில் வைத்து, OCD…

Read More