ஒ​ரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்​வியெழுப்பிய சஜித்!

பாராளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒ​ரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்​வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார். முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாஸ, தேர்தலை நடத்துவதற்கு,  பணம் தருகிறீர்களா? இல்லையா? அதற்கு ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 பில்லியனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  வழங்கி தேர்தலை நடத்தும் பொறுப்பு…

Read More

வட மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்!

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து நேற்று (23) மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்து வடக்கு மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து நேற்று (23) காலை மன்னாரில் மாபெரும் எதிர்ப்பு…

Read More

ஹாலி -எலவில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு சிறுவர்களின் சடலங்களும் மீட்பு!

ஹாலி -எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல் போயிருந்த இரு சிறுவர்களின் சடலங்களும் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலி –எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 வயது அண்ணனும், 8 வயது தங்கையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். போகொட, கொட்டியாமலுவ பிரதேசத்தில் நேற்று மாலை கடும் மழை பெய்த போது தமது வீட்டில் இருந்து, வடிகானுக்கு அப்பால் உள்ள வீடொன்றுக்கு தாய் சென்றிருந்ததால் அவரை அழைத்து வருவதற்காக சென்ற வேளையிலேயே குறித்த சிறுவர்கள்…

Read More

அல்லாஹ்வினால் சிறப்பிக்கப்பட்டுள்ள ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை அதிகம் ஓதுவோம்!

உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு தான் அவரது குணநலன்கள் என்ன? பழக்கவழக்கங்கள் என்ன? அவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பன போன்றவற்றை அறிந்து கொள்வது சாத்தியமாகும். ஆனால் இப்பொதுவிதியிலிருந்து அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் விலக்கு பெறுகிறார்கள். நபி(ஸல்) அவர்களது வாழ்வுதனை முழுமையாக அறிந்து…

Read More

தலைமைத்துவ ஆளுமை, அனுபவம், ஆற்றல் நிறைந்த அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று பிறந்ததினம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 74 ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனநாயக அரசியலின் தனித்துவமான தலைவராக உலகநாடுகளில் மதிக்கப்படுபவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராவார். அரசியல் அனுபவம், தலைமைத்துவ ஆளுமை, கல்வித்தகைமை போன்ற பல்வேறு ஆற்றல்களையும் கொண்ட அரசியல் தலைவராகவும் அவர் சர்வதேசரீதியில் போற்றப்படுகின்றார். அது மாத்திரமன்றி, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சநிலையை அடைந்து நாட்டின் தலைவர் பதவியைத் துறந்ததையடுத்து அன்றைய அரசாங்கமும் வலுவிழந்த நிலையில் காணப்பட்டது. நாட்டில் அரசாங்கமொன்றே இல்லையென்றவாறான நிலைமையொன்று அன்று காணப்பட்டது. பொருளாதார…

Read More

மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை மற்றும் டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் வசூலித்த எட்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் பிரகாரம் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது டெங்கு என்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச விலை 1,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், டெங்கு நுண்ணுயிர்…

Read More

A/L பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை இந்த செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. மனைப்பொருளியல், பரதநாட்டியம், கீழைத்தேய, மேலைத்தேய மற்றும் கர்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும் முதலான பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ளன. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப்படிவத்தில்…

Read More

லங்கா சதொச10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது!

இன்று முதல்  10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதன்படி விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விவரம் 1.  1kg காய்ந்த மிளகாய் குறைக்கப்பட்டது – ரூ.120 புதிய விலை – ரூ.1380 2. 1kg வெள்ளைப்பூண்டு குறைக்கப்பட்டது – ரூ. 25 புதிய விலை – ரூ. 450 3. 1kg சம்பா…

Read More

அம்பலமான பெசில் ராஜபக்ஷவின் குரல் பதிவு – மொட்டுக்குள் வெடித்தது சர்ச்சை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு மொரட்டுவ முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவே காரணம் என பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால…

Read More

‘மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரத்தில் ரணில் தலையிட வேண்டும்’ – இஷாக் ரஹ்மான்!

மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  நிதியமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி இந்நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகளில் 90 வருடங்களுக்கும் அதிக பழைமைவாய்ந்த முன்னணியில் உள்ள கல்லூரியாகும். சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்ட இந்த கல்லூரி அண்மைக்காலமாக மிகவும்…

Read More

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!

1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு,  வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று (23.03.2023) இறையடி சேர்ந்துவிட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின் வரலாறாயினும் , யாழ்ப்பாண முஸ்லிம்களின. வரலாறாயினும்  ,அவை பற்றிஎழுதியவர்களுள் அனேகமானவர்கள்  முஸ்லிம் அல்லாதவர்கள்தான்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் 44 வருடங்களுக்கு முன்பே ,யாழ் முஸ்லிம்கள் பற்றிய அரிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுத்து எழுதிய அவரது பணி மகத்தானது. தேசியக்கல்வி நிறுவனத்தின்  பிரதம செயற்றிட்ட அதிகாரியும் ,சிரேஷ்ட…

Read More

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 இளைஞர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் ஜனாஸாக்க நேற்று முன்தினம் (22) நல்லடக்கம் செய்யப்பட்டன. அம்பாறையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்ற 10 இளைஞர்கள் கடந்த 21 ஆம் திகதி எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்தனர். இதன்போது இளைஞரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன் அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றைய 3 இளைஞர்களும் அதிக நீர் வரத்து காரணமாக நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்முனைக்குடி, சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய…

Read More