ரமழானில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை தவிர்ந்துகொள்ளுங்கள்!

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மேற்படி பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; “ரமழான் நோன்பு என்பது ஓர் உன்னதமான வணக்கமாகும். இது இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற மக்களை புடம்போட்டு, புனிதப்படுத்துகின்ற ஒரு வணக்க வழிபாடாகும். சகிப்புத்தன்மையையும் பிறருக்கு தீங்கிழைக்காமல், உதவும் மனப்பாங்கையும் வளர்த்துக் கொண்டு, இறையச்சத்தை திடப்படுத்துகின்ற ஒரு வணக்கமாகும். இவற்றை உணர்ந்து செயற்படுகின்றபோதே எமது நோன்பு…

Read More

IPL தொடரிலிருந்து தடை செய்யப்படும் இலங்கை வீரர்கள்?

ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி 4 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குமிடையே நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும்  நடந்து வருவதால் பல வீரர்கள் இம்முறை தமது முதலாவது போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகங்கள் தமது வீரர்களை ஐபிஎல் இல் பங்குபற்ற இன்னும் விடுவிக்காதது…

Read More

யாசகம் மாபியா – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கைது!

ரமழான் மாதத்தில் வெளிநாடுகளிலிருந்து யாசகம் பெறுவதற்காக சில அடையாளம் தெரியாத கும்பல்களால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏராளமான யாசகர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் முன்னெடுக்கபப்ட்ட இந்த கைது நடவடிக்கையில், பல யாசகர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து யாசகம் எடுத்து பெருந்தொகையைக் குவித்துள்ளமையும் பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளிலிருந்து அமீரகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விசா, விமான டிக்கெட் மற்றும் தங்குமிட…

Read More

ஹாதியாவின் போராட்டம், வழக்கின் பின்­னணி; நடந்தது என்ன..? முழுவிபரம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாசிமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­வித்து கடந்த15 ஆம் திகதி கல்­முனை மேல் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. எனினும் அதி­லி­ருந்து 48 மணி நேரம் கடந்த நிலை­யி­லேயே அதா­வது, 17 ஆம் திகதி மாலை 5.45 மணி­ய­ள­வி­லேயே அவர்­ சி­றையில் இருந்து வெளி­யேற அனு­ம­திக்­கப்­பட்டார். வழக்கின் பின்­னணி : 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் ஏப்ரல் 26…

Read More

பால் தேநீரின் விலைஇன்று முதல் குறைப்பு!

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 90 ரூபாவாக இன்று முதல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர் சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்ள துபாய் பயணம்!

கொழும்பு 12 சேர்ந்த செல்வன் மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர், 2023 மார்ச் மாதம் 23ம்  திகதி முதல் ஏப்ரல் மாதம் 04ம் திகதி வரை துபாயில் நடைபெறவுள்ள 29வது சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். செல்வன் மொஹமட் கன்ஸுல்  இர்பான் உமைர் அல் ஹாபிழ் (புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்) ஆவார். அத்துடன், 2019/2020 ஆம் ஆண்டு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அல்-குர்ஆன்…

Read More

சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!

சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி அதிபரான இவர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராகவும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவராகவும் நீண்ட காலம் இருந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார். அத்துடன் சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபை, சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய அறபுக் கலாபீடம் என்பவற்றின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும் அவற்றின் தலைவராகவும்…

Read More

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்கம” என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு உத்தரவு – ஆளுநரை கண்டிக்கும் நஸீர் அஹமட்!

தொன்று தொட்டு “ஏறாவூர் புன்னைக்குடா வீதி” என புழக்கத்திலிருந்து வரும் புன்னைக்குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளது பிரதேசத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும்  அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது. இந்த அறிவித்தல் வெளியாகி ஏறாவூரில் பதற்றம்…

Read More

சர்வதேச சந்தைப் புலமைகளுக்கு இளைஞர்களை தயாராக்கும் அரசியல்! -சுஐப் எம்.காசிம்-

சர்வதேச அரசியலில் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் அவரது உள்ளூர் அரசியலுக்கு உதவுமா? இந்தக் கோணத்தில்தான் இனி அரசியல் களம் நகரவுள்ளது. ‘காலி முகத்திடல் ஆர்ப்பாட்டங்களால் சகலரதும் ஆரவாரங்கள் அரசியலில் அடங்கிப்போகும், இனி எஞ்சியுள்ளது மற்றொரு ஆட்சிக்கான சந்தர்ப்பம்தான்’ என்றெண்ணியிருந்தன சில கட்சிகள். மக்களின் ஆணையுடன் முறையான அரசியல் மாற்றங்கள் ஏற்படாது, எந்த அதிகாரங்களையும் பொறுப்பேற்பதில்லை எனவும் சில கட்சிகள் கர்ஜித்தன. ஆனால், நட்டாற்றில் நாட்டு மக்களை கைவிட விரும்பாத ரணில் விக்ரமசிங்க அழைப்பை ஏற்றார், அயராது உழைத்தார்,…

Read More

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மிக நல்ல லாபம் ஈட்டி வருகிறது. கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை காரணமே இல்லாமல்…

Read More

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; “பணம் கொடுத்து உதவுங்கள்” – கெஞ்சும் மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, தற்போது நண்பர்களிடமிருந்து இயன்றளவு பணம் வசூலித்து வருவதாக தெரிவித்தார். எனது ஆட்சிக் காலத்தில், நான் உலகின் நம்பிக்கையை வென்று ஜனநாயகத்தை நிலைநாட்டி, இதை ஒரு நல்ல நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈஸ்டர் தாக்குதல்கள் நிகழ்ந்து அனைத்தையும் அழித்துவிட்டது . “இப்போது…

Read More

‘IMF இன் உதவியை மீண்டும் பெறக்கூடாது’ – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை மீண்டும் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மகிழ்ச்சியான விடயம் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும் கடன் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப…

Read More

பால் மா விலை குறைப்பு!

பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இன்று முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More