
70 வருடத்துக்கு முன், மக்காவில் பெற்றுக் கொண்ட கபன் துணியோடு விடைபெற்ற ஓட்டமாவடி ஆசிம்மா
(எச்.எம்.எம். பர்ஸான்)
ஓட்டமாவடி 3ம் வட்டார எம்.கே. வீதியில் வசித்து வந்த எல்லோராலும் ஆசிம்மா என்று அழைக்கப்பட்டு வந்த ஹாஜியானி செய்னம்பு என்பவர் நேற்று (22) ம் திகதி தனது 107வது வயதில் வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன்.
இவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த மர்ஹும் அச்சி ஹாஜியாரின் மனைவியாவார். வபாத்தான ஆசிம்மா (செய்னம்பு) அவர்கள் 35 வயதில் இறுதிக் கடமை ஹஜ்ஜினை நிறைவேற்ற புனித மக்கா நகருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கென்று அவர் பெற்றுக் கொண்ட கபன் ஆடையினை இவ்வளவு காலமும் பாதுகாத்தும் வந்துள்ளார்.
நான் மரணித்தால் மக்கா நகரில் பெற்றுக் கொண்ட அந்த ஆடையினால்தான் எனக்கு கபனிட வேண்டும் என்று குடும்பத்தாருடன் வேண்டிக் கொண்டதிற்கினங்க அவருக்கு அவர் ஆசைப்பட்டது போல கபனிட்டு அவருடைய ஜனாஷா இன்று ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ மஸ்ஜித் மைய வாடியில் அஷர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாருக்கு உயர் தரமான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்.

More Stories
இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்!
இஸ்லாமிய சன்மார்க்க அழைப்பாளர் ஹஸன் பரீட் (பின்னூரி) ஹஸரத் அவர்ளுடைய மூன்றாவது மகனும், இஸ்லாமியா அரபிக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவனுமான. சாஹில் ஹஸன் பரீட் ( 19...
தலைமன்னார் பியரை சேர்ந்த முகம்மது நஃபில்கான் கடலில் மூழ்கி வபாத்!
கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு....
17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி...
சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார்!
சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (25) பிற்பகல் காலமானார். ஓய்வுபெற்ற பிரதி...
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!
1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு, வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று...
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!
மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர...